வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

change will come through education only :கல்வியால் மட்டுமே மாற்றம் வரும்:

சொல்கிறார்கள்                                                                                                                            



வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு, கல்வி உதவி செய்யும், "நம்மவர்கள்' அமைப்பின் உறுப்பினர் ஜான் ராஜா: வறுமையான சூழலில் வளர்ந்தாலும், படித்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். ஏழ்மையில் உள்ள மாணவர்கள் படிக்க, உதவ வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், இதை நண்பர்களிடம் கூறினால், என்ன சொல்வார்கள் என்று தயங்கினேன். என் நண்பர்கள் பலரும், இதே எண்ணத்தில் இருப்பது, பிறகு தான் தெரிந்தது. முதலில், 10 பேர் சேர்ந்து, ஆளுக்கு 100 ரூபாய் வீதம், ஆயிரம் ரூபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு, நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தோம். மன நிறைவான அந்த நாள், உற்சாகத்தையும், நிம்மதியையும் தந்தது. எங்களின் இந்தப் பணியை, சிலர் வெளிப்படையாகவே ஏளனம் செய்தனர். அதை, நாங்கள் பொருட்படுத்தவில்லை. இன்று, பல நிறுவனங்களில் பணிபுரியும், 86 பேர் நம்மவர்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, நான் உட்பட யாருக்கும் எந்தப் பதவியும் இல்லை. வட சென்னைப் பகுதியில், நன்றாகப் படிக்குகல்வியால் மட்டுமே மாற்றம் வரும்: வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு, கல்வி உதவி செய்யும், "நம்மவர்கள்' அமைப்பின் உறுப்பினர் ஜான் ராஜா: வறுமையான சூழலில் வளர்ந்தாலும், படித்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். ஏழ்மையில் உள்ள மாணவர்கள் படிக்க, உதவ வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், இதை நண்பர்களிடம் கூறினால், என்ன சொல்வார்கள் என்று தயங்கினேன். என் நண்பர்கள் பலரும், இதே எண்ணத்தில் இருப்பது, பிறகு தான் தெரிந்தது. முதலில், 10 பேர் சேர்ந்து, ஆளுக்கு 100 ரூபாய் வீதம், ஆயிரம் ரூபாயில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு, நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தோம். மன நிறைவான அந்த நாள், உற்சாகத்தையும், நிம்மதியையும் தந்தது. எங்களின் இந்தப் பணியை, சிலர் வெளிப்படையாகவே ஏளனம் செய்தனர். அதை, நாங்கள் பொருட்படுத்தவில்லை. இன்று, பல நிறுவனங்களில் பணிபுரியும், 86 பேர் நம்மவர்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, நான் உட்பட யாருக்கும் எந்தப் பதவியும் இல்லை. வட சென்னைப் பகுதியில், நன்றாகப் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள,15 மாணவர்களைத் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் என்ன படிக்க விரும்பினாலும், அதற்கான முழுச் செலவையும், எங்கள் அமைப்பு ஏற்றுக் கொள்ளும். உதவி தேவைப்படும் மாணவர்கள் யார் வேண்டுமானாலும், எங்களுக்குத் தகவல் தரலாம். தகவல் கிடைத்ததும், மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கும், அவர்களின் வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, விவரங்களைச் சேகரித்து, உதவி பெறத் தகுதியான மாணவர் என்றால், உடனே, தேவையானவற்றை செய்வோம். எங்களின் அமைப்பைப் பற்றி அறிந்த வெளிநாட்டு நண்பர்கள் பலர், உதவ முன்வந்துள்ளனர். இதையெல்லாம் விட, எங்கள் பெற்றோர் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். கல்வியால் மட்டுமே, சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில், உறுதியாக உள்ளோம். அதனால், கல்வியை அடிப்படையாக வைத்தே, எங்கள் செயல்பாடுகள் இருக்கும். கற்றறிந்த சமூகத்தை உருவாக்குவதே, எங்களின் லட்சியம்.ம் ஏழ்மை நிலையில் உள்ள,15 மாணவர்களைத் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் என்ன படிக்க விரும்பினாலும், அதற்கான முழுச் செலவையும், எங்கள் அமைப்பு ஏற்றுக் கொள்ளும். உதவி தேவைப்படும் மாணவர்கள் யார் வேண்டுமானாலும், எங்களுக்குத் தகவல் தரலாம். தகவல் கிடைத்ததும், மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கும், அவர்களின் வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, விவரங்களைச் சேகரித்து, உதவி பெறத் தகுதியான மாணவர் என்றால், உடனே, தேவையானவற்றை செய்வோம். எங்களின் அமைப்பைப் பற்றி அறிந்த வெளிநாட்டு நண்பர்கள் பலர், உதவ முன்வந்துள்ளனர். இதையெல்லாம் விட, எங்கள் பெற்றோர் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். கல்வியால் மட்டுமே, சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில், உறுதியாக உள்ளோம். அதனால், கல்வியை அடிப்படையாக வைத்தே, எங்கள் செயல்பாடுகள் இருக்கும். கற்றறிந்த சமூகத்தை உருவாக்குவதே, எங்களின் லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக