சனி, 18 செப்டம்பர், 2010

தலித் அதிகாரிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது: ஜெயலலிதா

First Published : 18 Sep 2010 12:00:00 AM IST

Last Updated : 18 Sep 2010 12:50:30 AM IST

சென்னை, செப்.17: திமுக ஆட்சியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்ட துணை ஆட்சியர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் என தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது.அந்த வகையில் தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டல உதவி தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் மு. முருகன் தாக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார்.கடந்த 7-ம் தேதி வழக்கம் போல் அலுவலகத்திற்குச் சென்ற முருகன் வீடு திரும்பவில்லை.  ஆனால், மருந்து குடித்ததன் காரணமாக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வீட்டிற்கு தகவல் மட்டும் அனுப்பப்பட்டது.  அவரது மனைவி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தன் கணவரைப் பார்த்திருக்கிறார். தன் கணவரின் இடது தோள்பட்டைக்கு கீழ் ரத்த காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 9-ம் தேதி புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 11-ம் தேதி முருகன் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.தனது கணவரின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை அறிந்த அவரது மனைவி, 13.9.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், தன் கணவருக்கு குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ரேஷன் பொருள்கள் கடத்தல் தொடர்பாக முந்தைய மண்டல மேலாளர் மற்றும் சிலர் மீது நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்திடமும், காவல் துறையிடமும் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார்கள் வழங்கியதாகவும் கூறியிருக்கிறார். மேற்படி நபர்களால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று தன் கணவர் தன்னிடம் ஏற்கெனவே கூறியதாகவும், கொலையை மறைப்பதற்கான முயற்சி நடப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.மேலும், தன் கணவர் வழக்கமாக கையில் வைத்திருக்கும் டைரி மற்றும் பை தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.எனவே கொலையை தற்கொலையாக காவல் துறையினர் மாற்றி இருக்கின்றனரோ என்ற சந்தேகம் இப்போது அப்பகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது. ரேஷன் பொருள்களை கடத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை முதல்வர் கருணாநிதிக்கு இருந்திருந்தால், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும். மேற்படி கடத்தல் மற்றும் கொலை சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், மரணமடைந்த முருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

உண்மையிலேயே திருந்தியிருந்தால் பழைய செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மாறாகத் தமிழினப் படுகொலைகாரர்களுடன் கூட்டணி வைத்துள்ளமையால் மக்களிடம் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை அறுவடை செய்தவற்கான தந்திரம் என்றால் எதிர்பார்த்த பயன் இருக்காது. முதல்வரும் ஆய்வாளர் மு.முருகன் இறப்பு குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவுதான் நலத்திட்டங்கள் புரிந்தாலும் தமிழினப் படுகொலை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள மாறா வடுவையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:13:00 PM
ஊழலின் முன்னாள் பணச் சாதி ஒன்றுதான் நிற்கும். இவர் குறிப்பிட்டவர்களெல்லாம் பாதிப்பிற்கு உள்ளானதன் காரணம் சாதியன்று. அவ்வாறிருக்க சாதி அடிப்படையில் குற்றம் சுமத்துவது பொருந்தாது. நேர்மையாகச் செயல்பட எண்ணுவோர் முடக்கப்படுகிறார்கள் என்று கூறினால் அது பொருந்தும். ஆனால் தேர்தல் நேரம் நெருங்க நெருங்க அரசு ஊழியர்கள் மீது பாச மழை பொழிபவர் எப்பொழுதும் எல்லார் மீதும் பரிவு காட்டலாமே. இவர் காலத்தில் கோப்புகள் போயசு தோட்டத்தில் உறங்கிக் கிடந்தமையால் நீதி கிடைக்காமல் போனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அரசு ஊழியர்கள் அனைவருமே தி.மு.க. என்று தவறாக எண்ணிக் கொண்டு முரட்டு நடவடிக்கை எடுத்ததை நினைவு படுத்தத்தேவையில்லை. எனவே, உண்மையிலேயே திருந்தயிருந்தால் பழைய செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மாறாகத் தமிழினப் படுகொலைகாரர்களுடன் கூட்டணி வைத்துள்ளமையால் மக்களிடம் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை அறுவடை செய்தவற்கான தந்திரம் என்றால் எதிர்பார்த்த பயன் இருக்காது. முதல்வரும் ஆய்வாளர் மு.முருகன் இறப்பு குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவுதான் நலத்திட்டங்கள் புரிந்தாலும் தமிழினப் படுகொலை மக்களிடையே
By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2010 1:11:00 PM
ஆமாம் உன் தானை தலைவி முதல்வரா வருவார் அப்பா ராஜாச்சி அப்போது நீ தான் அவருக்கு குண்டி கழுவி விடனும் ஏன்டா அவருக்கு தான் தானாக எதையும் செய்ய தெரியாதே.நீ தான் கழுவனும் நீ தான் கழுவனும் .போடா புண்ணாக்கு நீயும் உன் கனவும் உன் வாயிலே பிஸ்கோத்தை தான் வைக்கணும்.
By periya karuppan.kadalur
9/18/2010 12:14:00 PM
jj! you donot give comments just to get votes. we want you to do really good to the people. you should not do welfare facility to a particular people only. the welfare schemes should reach everyone. but please stop giving long long statements. give brief statement but at the same time strong one.
By ram
9/18/2010 11:57:00 AM
Another honest officer victimised by Govt., Our sympathy with the family and we want justice
By Boodhi Dharma
9/18/2010 8:23:00 AM
Involment of political parties in this case is appreciable. But they should not advantage out of this case. Why congress and ruling party do not take part in this rally? It means politician from ruling party is acting behind the screen to suport the higher govt officals who have been alleged involed the suspected or abettment to the suiside. CBI inquiry is required to bring the truth to the public.
By m sundaram
9/18/2010 5:12:00 AM
புரட்சித் தலைவியின் ஆட்சி மலர்ந்ததும் ..... திருக்குவளை தீயசக்தியாம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தாக்கப் பட்ட தலித் அதிகாரிகள்.... பழிவாங்கப் பட்ட தலித் அதிகாரிகள்... மர்மமான முறையில் மரணமடைந்த தலித் அதிகாரிகள் சம்பந்தமாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் ! இந்த விசாரணைக் கமிஷன் அளிக்கும் அறிக்கையின் படி குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் ! மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் ! புரட்சித் தலைவி அவர்கள் இதனை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மக்களுக்கு நேரத்தோடு பிரகடனப் படுத்த வேண்டும் !!! நன்றி !!! @ rajasji
By rajasji
9/18/2010 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக