புதன், 14 ஜூலை, 2010

அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்

forgotten-people
இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு  இந்தியா இதுவரை செய்த           நிகழ்வுகள் அனைத்தையும்  உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும்.
தமிழ்  ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெடிகுண்டு வீசி  தன் நாட்டு மக்களை தன் சொந்த நாட்டிலே அகதிகளாக வைத்து வேடிக்கை பார்க்கும் ஒரே நாடு இலங்கையாக மட்டும்   தான் இருக்க முடியும். இதனை உலக நாடுகளும், ஐ.நா சபையும், மனித உ¡¢மை அமைப்புகளும், பல சர்வதேச அமைப்புகளும் வேடிக்ககை மட்டும் தான் பார்க்கிறது.
போர் முடிந்து ஓர் ஆண்டு ஆன நிலையில் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கள்    சொந்த இடஙகளுக்கு சென்று மீள் குடியேற்றம் செய்ய  இலங்கை முன் வரவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்டு  சொந்த இடங்களை இழந்த மக்களை மீள் குடியமர்த்த இந்தியாவும், உலக நாடுகளும், ஐ.நா சபையும்  தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும், மனிதாபிமான உதவிகையும் இதுவரை இலங்கை செய்யவில்லை. இதறக்கு  இந்தியாவும், உலக நாடுகளும்,  ஐ.நா சபையும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால்  பகுதியில் பல்லாயிர கணக்கான  மக்களை  கொடுரமாகவும் போர் சட்டங்களை மீறியும்  கொலை செய்த  ராஜபட்க்சே    மீது இது வரை போர் குற்ற விசாரனை நடத்தபடாமல்  உள்ளது § தமிழர்களுக்கு  வேதனையை  அளிக்கிறது பாதிக்கப்பட்ட மக்களை முள் வேளிக்குள் வைத்து வேடிக்கை பார்க்கும் இலங்கையை இதுவரை எந்த நாடும் தட்டி கேக்காதது மிகவும் வேதனையான நிகழ்வாகும்.  இலங்கை அரசு தமிழ் மக்களை முள் வேளிக்குள் வைத்து  வேடிக்கை பார்ப்பதோடு  மட்டுமல்லாமல் தமிழர் பகுதிகளை சிங்கள மய மாக்கி வருகிறது. வட இலங்கையில் தமிழர்களின் 80 சதவிகித விவசாய நிளங்கள் இரணுவத்தின் கட்டுப்பாட்டில்  உள்ளது.  இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புத்த விஹார், புத்தர் சிலையையும் நிறுவி தமிழர்களின் அடையாளங்களை அழித்து பாதிக்கப்பட்ட  மக்களின் மீள் குடியேற்றம் செய்யாமல் தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம், தரைப்படை தளம்,விமான தளம்,கடற்படை  தளம்,என அமைத்து இராணுவ பலத்தின் மூலம் தமிழர் பகுதிகளை சிங்கள தேசமாகவும்  இராணுவ முகாமாகவும்     மாற்றி அமைத்து வரும் இந்த  வேளையில் தற்பொழுது இந்தியா வேடிக்கை  பார்ப்பது எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தையும்,பெரும் அழிவையும் இந்தியா எதிர் நோக்கி உள்ளதை இதுவரை அறியவில்லை. இலங்கையில் விடுதலைப்புலிகளை  ஒழிக்க இந்தியா, சீனா, பாக்கிஸ்தான்  போன்ற அண்டை  நாடுகள் பல வழிகளில் போட்டி போட்டுக்கொண்டு  உதவி பு¡¢ந்ததை உலக நாடுகளும்   அறியும்,உலக மக்களும் அறிவார்கள்  இலங்கையில்  போர் முடிந்து ஒரு ஆண்டு  ஆகியும் அங்கே  சீனாவின் ஆதிக்கம்  விரைவாக  வளர்வதை  இந்தியா வேடிக்கை  மட்டும் தான்  பார்த்துக்கொண்டு  இருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரைவாக வளர்வதன் மூலம் எதிர் காலத்தில் இந்தியாவிற்கு  மிகப்பொ¢ய ஆபத்தும், அச்சுருத்தழும்  ஏற்பட  வாய்ப்பு உள்ளது.
இலங்கை  விடுதலைப்புலிகளை ஒழிக்க உதவிய சீனாவிற்கும்  பாக்கிஸ்தானிற்கும் நன்றி கடனாக பல வழிகளில் உதவி வருகிறது குறிப்பாக அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு சீனா இலங்கையில் துறைமுகம் மேம்பாட்டு பனி என்ற பெயா¢ல் கடற்படை தளத்தை அமைக்க நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது இது எதிர் காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும்  குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் வரப்போகும்  மிகப்பொ¢ய ஆபத்திற்கு அடித்தளமாகும். இலங்கையில் சுமார்  1.5  லட்சம் சீனர்கள்  அபிவிருத்தி திட்டதில் பங்கு  பெற்று வருகின்றனர் இந்த எண்ணிக்கையில்  அதிக அளவு  இராணுவ வீரர்கள், முண்ணாள்  இராணுவ வீரர்கள் இருப்பதாக பல தகவல்கள் தெருவிக்கின்றன இந்த எண்ணிக்கை எதிர் காலத்தில் கூடக்கூடும். இலங்கையில்      சீனா அபிவிருத்தி என்ற பெயா¢ல் கடற்படைத்தளத்தையும், தரைப்படை தளத்தையும், விமாண தளத்தையும் மேம்படுத்தி  வருவதை கண்டு இதுவரை இந்தியா  அச்சம்  கொள்ளவில்லை. இலங்கை  அதிபர்  ராஜபட்சே  இந்தியாவைவிட   பாக்கிஸ்தானையும்,  சீனவையும் நட்பு கொண்டு  உதவிகள்  பல  பெற்று வருகிறார்  எதிர் காலத்தில் இராணுவ        ¡£தியான உதவிகளை பெறவும் உள்ளார். இலங்கையில் சீனா அமைக்கும் அபிவிருத்தி திட்டம் வட இலங்கை பகுதியில் அதிகமாக அமைய  உள்ளது இந்த பகுதியானது  தமிழ் நாட்டிற்கு மிகவும் நெருங்கிய பகுதியாகும்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேசம், மியான்மர், பூடான், நேபாளம், திபெத்,  போன்ற நாடுகளால் நமக்கு எப்பொழுதும்  ஆபத்து ஏற்படலாம்.  இந்தியாவின்  தென் பிராந்தியத்தில் பாதுகாப்பில் இந்த நாள் வரை எந்த அச்சுருத்தளும்,ஆபத்தும் இல்லாமல் இருந்து வந்தது ஆனால் இலங்கையின் நடவடிக்கையினால் எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தும் ,அச்சுருதளும் ஏற்படலாம். குறிப்பாக தமிழ் நட்டிற்க்கு பொ¢ய அளவு அபத்தும் அழிவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இலங்கையில் தற்பொழுது சீனாவும்,பாக்கிஸ்தாணும்  கால்  ஊன்றி உள்ள நிலையில் பூளோக ¡£தியாக எதிர்காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் குறிப்பாக  தமிழ் நாட்டிற்கும் மிகப்பொ¢ய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் இந்தியா  இலங்கையில் சீனா, பாக்கிஸ்தான் ஆகிய இரு  நாடுகளையும் கால் பதிக்க விடாமல் தடுத்து அனைத்து                முதலீடுகளையும்  இந்தியா செய்து இரு நாடுகளையும் இலங்கையில் நுழைய விடாமல் இலங்கையை இந்தியா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் உள் கட்டமைப்புகளையும் உடனடியாக இந்தியா செய்து கொடுக்க முன்வரவேண்டும்.மேளும் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தங்கள் சொந்த இடத்தில் மீண்டும் குடி அமரவும்,           மீள்குடியேற்றம் நடைபெறவும் இந்தியா தேவையான நடவடிக்கையை உடனடியாக செய்ய முன் வரவேண்டும். குறிப்பாக     தமிழர் பகுதிகள் சிங்கள மய மாவதை உடனடியாக தடுத்து  நிறுத்தி இலங்கையில் அரசியல் சுய நிர்னயம் செய்து தமிழர்கள் அமைதியாக வாழ வழி செய்து தேவையான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பு போன்று இலங்கையில் புதியதாக ஒரு ஒருஅரசியல் அமைப்பு ஏற்படுத்தி தமிழர் மாநில சுய ஆட்சி ஏற்பட இந்தியா இலங்கையை நிர்பந்திக்க வேண்டும். மேலும் தமிழர் பகுதிகளில் சமயசார்பற்ற மக்களாட்சி நடைபெற இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இலங்கையில் அமைதி நிலவும்.
எதிர்காலத்தில் மூண்றாம் உலக போர் என வந்தால் அதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.அதே போன்று இலங்கையும் மிக முக்கிய நாடாக திகழும் காரனம் இலங்கையில் சீனாவும், பாக்கிஸ்தனும் அமைத்துவரும் அடித்தளமாகும்.இலங்கையில் தற்பொழுது சீனாவும் பாகிஸ்தானும் அமைக்கும் அடித்தளம் மூண்றாம்  உலக போ¡¢னை கவனத்தில் கொண்டு அமைக்கபடுகிறது.இந்த அடித்தளத்திற்கு துனை போகும் இலங்கையினால் அதிகம் பாதிக்கபட போவது இந்தியாவும்,தமிழகமும் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கையும் தான்.மூன்றாம் உலக போர் வந்தால் தெற்கு ஆசியாவில் இலங்கை போர் களமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு பூளோகா£தியாக நாண்கு பக்கமும் ஆபத்து நெருங்கிவரும் வேளையில்  இந்தியா இப்பொழுதே  விழித்துக்கொண்டால் நாட்டிற்கு பாதுகாப்பு.
இந்தியா இதுவரை செய்ததை மறந்து எதிர் கால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தனது நடவடிக்கையை இப்பொழுதே மாற்றிக்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற அமைப்பை நிறுவி தனி ஈழம் அமைக்க தேவையான சட்டநடவடிக்கைகளை அமைதியின் மூலம் எடுத்துவருகின்றனர். நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அமொ¢க்கா, பி¡¢ட்டன், பிரான்சு,கணடா,போன்ற நாடுகள் ஆதரவு தொ¢வித்து உதவி வருகின்றன.நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலம் தனி ஈழம் அமைக்க விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் அமொ¢க்காவின் ஆதரவுடனும், இங்கிலாந்து  ஆதரவுடனும் தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுத்து வருகிறார். யூதர்களுக்கு அமைந்த தனி நாடு போன்று தமிழர்களுக்கு தனி நாடு அமைந்தால் அமைக்கப்படும் தமிழ் ஈழம் கண்டிப்பாக அமொ¢க்காவிற்கும்,  பி¡¢ட்டனுக்கும்,       பிரான்சுக்கும் ஆதரவாகதான் செயல்படும்.இலங்கையில் எதிர்காலத்தில் சீனா, பாக்கிஸ்தான்  இரானுவ தளம், கப்பல் படை தளம், விமான தளம் போன்றவற்றை அமைத்தால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்  அதே போன்று தனி ஈழம் அமைக்கப்பட்டால் இந்தியாவிற்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது காரணம் இதுவரை தனி ஈழம்  அமையாததற்கு இந்தியா காரணம் என புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.தனி ஈழம் அமைக்கப்பட்டால் அமைய போகும் ஈழத்தில் அமொ¢க்காவும்,பி¡¢ட்டனும்  சீனா.பாக்கிஸ்தான் ஆகியவற்றிக்கு போட்டியாக எதிர்காலத்தில்  இராணுவ தளம்.கடற்படை, விமாணத்தளம், போன்றவற்றை அமைத்தால் இதுவும் இந்தியவிற்க்கு மிகப்பொ¢ய ஆபத்தும் அச்சுருத்தளும் ஏற்பட  அதிகம் வாய்ப்பு உள்ளது.மூண்றாம் உலகப்போர் வந்தால் அமொ¢க்கா,பி¡¢ட்டன் ஒரு அணியாகவும். சீன,பாக்கிஸ்தான் ஒரு அணியாகவும்  மாறி செயல் பட வாய்ப்பு உள்ளது இதில் இந்தியா எந்த அணியில்  சேர்ந்தாளும் நடுநிலை வகித்தாளும் மிகப்பொ¢ய போர் ஆபத்தை சந்திக்க நோ¢டும்.
இலங்கை தீவில் சீன,பாக்கிஸ்தான்,அமொ¢க்கா,பி¡¢ட்டன்,இஸ்ரேல்,போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி  ராடார்களையும்,இராணுவத்தளங்களையும் எதிர் காலத்தில் அமைத்து   விட்டால் தென் இந்தியவில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம், ஸ்ரீஹா¢கோட்டா, மஹேந்திரகி¡¢, கைகா, பெங்களுரு,ஹைத்ராபாத், தும்பா, சென்னை, கொச்சி,போன்ற பகுதிகளுக்கு அச்சுருத்தளும்,ஆபத்தும்,ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும்  இலங்கையை பல  நாடுகள் போர்களமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.இதனை கருத்தில் கொண்டு இந்தியாவும்,இலங்கையும், ஆபத்து வரும் முன்னரே தடுத்து நிறுத்த முயற்ச்சி மேற்க்கொண்டு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் .  மூண்றாம் உலக போர் வந்தால்  ஜப்பான்  தீவில்  இரண்டம் உலகப்போ¡¢ல் நடந்த அதே நிகழ்வு இலங்கை தீவில் நடந்தாளும் நடக்கலாம் இதற்க்கு இந்தியாவும்,இலங்கையும் இடம் அளிக்க கூடாது இப்பொழுதே இரு  நாடுகளும் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.  தமிழ் மொழியில் ஒரு பல மொழி உள்ளது  “இரண்டு வீட்டு  விருந்தாளி பசி வந்து இறந்தான்” என்ற பல மொழிக்கு உதாரணமாக இந்தியா மாறிவிட கூடாது .அதற்க்கு இப்பொழுதே இலங்கையில் ஈழ தமிழ் மக்கள் அரசியல் சுய ஆட்சியையும்,தன்னாட்சியையும் பெற்று இந்தியா போன்று இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ தேவையான நடவடிக்களை எடுத்து தமிழர் பகுதிகளை  தமிழர்களே ஆட்சி செய்யவும் இந்தியா, இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்க்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும் இல்லை என்றால் தமிழர் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பதே கிடையாது தனி ஈழம் அமைய இந்தியா உதவி செய்வதன் மூலம் தமிழ் மக்களின் நன் மதிப்பை பெற்று விடலாம் இலங்கையும் அமைதி பூங்காவாக மாற்றம் அடையும்.
கட்டுரையாளர்,
ஏ.பி.முருகானந்தம்.
apmmedia59@yahoo.com
}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக