poor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
poor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

Parents should be Role Model : பெற்றோர் முன்முறையாக இருக்க வேண்டும்!

சொல்கிறார்கள்


குழந்தைகள் நல மருத்துவர் லதா சந்திரசேகரன்: முன்பெல்லாம், "என் குழந்தை ஒல்லியாகவே உள்ளது' என்ற கவலையுடன் தான், பெற்றோர் வருவர். குழந்தை ஒல்லியாக இருப்பதற்கான காரணம், போதிய சத்து நிறைந்த உணவுப் பொருளைச் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாகச் சாப்பிடுவது தான். ஆனால், இப்போதுள்ள குழந்தைகளின் மிகப் பெரிய பிரச்னை, உடல் பருமன் தான்.பெற்றோர் வேலைக்குச் செல்வதால், பல வீடுகளில் மதிய உணவிற்கு நூடுல்சையும், குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு வந்ததும், சமோசா, சிப்ஸ் போன்றவற்றையும் கொடுத்து, அதையே ஒரு உணவுப் பழக்கமாக ஆக்கிவிடுவர். அடுத்த காரணம், "டிவி' பார்த்துக் கொண்டே, ஏதோ ஒன்றைச் சாப்பிடுவது."வெளியில் சென்று விளையாடுவதற்கு நேரமும் இல்லை; இட வசதியும் இல்லை' என்று காரணம் சொல்லி, கம்ப்யூட்டர், "டிவி'யுடன் குழந்தைகள் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால், சீக்கிரமே குண்டாகி விடுகின்றனர்.குழந்தைகள் குண்டாகாமல், சரியான உடல் பருமனுடன் இருக்க வேண்டுமானால், அதற்கு பெற்றோர் ஒரு நல்ல ரோல் மாடலாக இருக்க வேண்டும். தினமும் பெற்றோர் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து தான், குழந்தைகளும் செய்ய ஆரம்பிப்பர்.சிறு வயதிலேயே, குழந்தைகளுக்கு உடல் பருமன் இருந்தால், தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். சில பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.தினமும், நடைப் பயிற்சி, ஓடி ஆடி விளையாடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணாமல் இருப்பது, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்றவற்றை அதிகம் சாப்பிடாமல், நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பருமன் என்ற பேச்சிற்கே இடமில்லை.

                                          "ஏழைகளின் பிரிஜ்!'                           

களி மண்ணால் ஆன, "பிரிஜ்' தயாரித்துள்ள குஜராத்தைச் சேர்ந்த மன்சுக்பை பிரஜாபதி: 2001ல், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, மார்பி பகுதியில் இருந்த அனைத்து மண் குடங்களும் உடைந்து விட்டன. அடுத்த நாள் செய்தித்தாளில், "ஏழைகளின் "பிரிஜ்' உடைந்து விட்டது' என்று தலைப்பிட்டு, உடைந்த பானையுடன் படங்கள் வெளியாகியிருந்தன. இதுவே, எனக்கு களிமண்ணால் ஆன, "பிரிஜ்' செய்ய தூண்டுகோலாக இருந்தது. மின்சாரம் இல்லாமல் இயங்கும் இதற்கு, பராமரிப்பு அறவே தேவையில்லை. இதில், காய்கறிகளை அதன் சுவை மாறாமல், ஐந்து நாட்களும், பாலை, 24 மணி நேரமும் கெடாமல் வைத்திருக்கலாம். மேலும், 20 லிட்டர் நீரைக் குளிர்விக்க முடியும். இதன் விலை, 2,500 ரூபாய் தான்! நம் பாட்டி காலத்தில், பானையில் மோர் ஊற்றி வைத்து, உச்சிவெயில் நேரத்தில், குளிர்ச்சியான மோர் குடிப்பர். அந்த கோட்பாடு, தான் இதற்கும். பிரிஜின் மேல்புறத்தில் உள்ள வெப்பம், நீராவி மூலம் வெளியேற்றப்படுவதால், அறையின் வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதில், இரண்டு பாகங்கள் உள்ளதால், மேல் பக்கத்தில் நீரையும், கீழே காய், கனி, பால் முதலியவற்றையும் சேமித்துக் கொள்ளலாம். இதுவரை நான் களிமண்ணால் ஆன, பிரஷர் குக்கர், நீர் வடிகலன் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளேன். என் கண்டுபிடிப்பைப் பாராட்டி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 2003ல் தேசிய விருது வழங்கினார். பல நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள், என் கண்டுபிடிப்பைப் பாராட்டியுள்ளனர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

Free supply will continue: ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்: முதல்வர் கருணாநிதி

நலத்திட்டங்களுக்குப் பாராட்டுகள். எனினும், ஏழைகள்  இருக்கும் வரை இலவசம் தொடரும் என்பதை நிலையாக ஆக்காமல் இலவசம் பெற யாரும் இல்லை என்னும்படி எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான , இல்லாமை இல்லாமல் போகும்படியான, ஏழைகளற்ற மன்பதையை உருவாக்குவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்: முதல்வர் கருணாநிதி

சென்னை பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் இலவச பொங்கல் பொருள்களை பயனாளி ஒருவருக்கு வழங்குகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் பல்லாவரம் நகராட்சித்
தாம்பரம், ஜன. 1: ஏழைகள் இருக்கும்வரை இலவச உதவிகள் தொடரும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.சென்னை பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், இலவச பொங்கல் பொருள்கள் வழங்கும் திட்டம், இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்து அவர் பேசியது:உலகம் முழுவதும் ஜனவரி முதல் நாள் வருடப் பிறப்பு நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கென தனித்தனி வருடப்பிறப்பு நாள்கள் உள்ளன.ஆனால், தமிழர்களுக்கு அட்சய ஆண்டு முதல் பிரபவ ஆண்டுவரை 60 ஆண்டுகள் நிறைவடைந்து, மீண்டும் அட்சய ஆண்டு தொடங்குவது குழப்பமாக உள்ளது. இது தமிழ் ஆண்டை திட்டவட்டமாகக் கூறக்கூடிய கணக்காக இல்லை.வீடுதோறும் விளக்கேற்றுங்கள்: எனவே, நம் மூதாதையர்கள், முன்னோர்கள், நம்மை ஆளாக்கியவர்கள், அடையாளம் காட்டியவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்த தை முதல் நாளை, தமிழர்களாகிய நாம், தமிழ் கலாசாரத்தைப் போற்றுகிறவர்களாகிய நாம், தமிழர் வருடப் பிறப்பு நாளாக, தமிழர் திருநாளாக, வீடுகளில் அகல் விளக்கேற்றி கொண்டாடி மகிழ வேண்டும்.தைத் திருநாளில் அனைவரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று அரசு சார்பில் பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இலவசம் என்பது சிலருக்கு இழிவான சொல்லாகக் கருதப்படுகிறது. எல்லாம் இலவசமாக வழங்கப்படுகிறதே, இது என்ன பொருளாதாரம் என்றுகூட சில பத்திரிகைகள் கேலி செய்கின்றன.ஆனால், பத்திரிகைகளும் இலவச இணைப்புகளை வெளியிடுகின்றன. இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும்வரை இது போன்ற இலவச உதவிகளை வழங்கிக்கொண்டே இருப்போம்.1990-ல் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு | 256 கோடி செலவில் 1 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேஷ்டிகளும், 3 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் சேலைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.இந்தத் திட்டத்தின் மூலம் 221 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 11 ஆயிரம் நெசவாளர்களும், 121 விசைத்தறி நெசவாளர் சங்கங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் நெசவாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைந்துள்ளனர் என்றார் முதல்வர் மு.கருணாநிதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வருவாய்த் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலர் எஸ்.மாலதி, பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் ஸ்வரண்சிங், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.