greettings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
greettings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 மே, 2010

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி



சென்னை, மே 6: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னையைச் சேர்ந்த லலிதா (12-வது ரேங்க்), கனகவல்லி (15-வது ரேங்க்) ஆகிய 2 பேர் முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய அளவில் டாக்டர் ஷாபேசல் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள இவர், ஸ்ரீநகரில் மருத்துவப் பட்டம் பெற்றவர்.தில்லியைச் சேர்ந்த பொறியாளர் பிரகாஷ்ராஜ் புரோஹித் 2-ம் இடம் பிடித்துள்ளார்.இது குறித்த விவரம்:யு.பி.எஸ்.சி. நடத்திய ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான நேர்காணல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 195 பேர் பெண்கள். மேலும், இதில் 30 பேர் மாற்றுத் திறன் படைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 5 பேர் பார்வையற்றவர்களாவர்.சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2 பெண்கள் முதல் 25 இடங்களில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில், 15-வது ரேங்க் பெற்ற கனகவல்லி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக மேம்பாட்டுத் துறையில் பயிற்சி உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த இவர், 3 முறை சிவில் சர்வீஸ் தேர்வு நேர்காணல் வரைச் சென்றுள்ளார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கடைசி முயற்சியாக வீட்டில் இருந்தபடியே படித்த கனகவல்லி, நாட்டிலேயே 15-வது ரேங்க் பெற்றுள்ளார்.சென்னையில் உள்ள அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் மாதிரி நேர்காணல் பயிற்சி பெற்றேன். டேவிதார், உதயசந்திரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆலோசனைகள், நேர்காணலின்போது உதவியாக இருந்தது என்றார் கனகவல்லி.மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., மையம்: சென்னையில் உள்ள சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் மூலம் 83 மாணவர்கள் நேர்காணலுக்குச் சென்றனர். இதில் 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 12-வது ரேங்க் பெற்று சிறப்பிடம் பிடித்த லலிதா, இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்.முதன்முறையாக தேர்வெழுதிய சண்முகப்ரியா (36-வது ரேங்க்), சிவகுமார் (38-வது ரேங்க்), நிவாஸ் (45-வது ரேங்க்), வினோத்ப்ரியா (62-வது ரேங்க்) ஆகியோர் வெற்றிபெற்றதன் மூலம் சிறப்பு சேர்த்துள்ளனர் என்று மையத்தின் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி இயக்குநர் வாவூசி தெரிவித்துள்ளனர்.மேலும், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாதெமியில் படித்த சுமார் 50 பேரும், பி.எல்.ராஜ் மெம்மோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாதெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்டேடஜி அகாதெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களில் வெவ்வேறு பாடங்களுக்கு பதிவு செய்து படித்திருப்பதால், எண்ணிக்கை மாறுபடும்.

தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துகள். எங்குப் பணியாற்றியானாலும் நேர்மையாகவும் மக்கள் நலப்பணிகளில் கருத்து செலுத்தியும் தமிழ் மொழி,இலக்கிய, நாகரிக, பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பியும் பணியாற்றும் பகுதியின் மொழியைக் கற்றும் ஒப்பிலக்கியத்தில் ஈடுபட்டும் மாமனிதர்களாகப் பணியாற்றுக. உயர் பதவிகளில் செல்லச் செல்ல அடக்கத்திலும் உயர்க. குறுக்கு வழியாளர்களின் செல்வாக்குகளுக்கு இரையாகாமல் நேர்மையானவர்களின் துணைக்கொண்டும் ஆன்றோர்கள் சான்றோரகள் வழிகாட்டினைப் பெற்றும் நாட்டு முன்னேற்றததை உலக அளவில் கொண்டு போகும் வண்ணம் செயலாற்றுக! தினமணி இணைய நேயர்கள் சார்பில் வாழ்த்தும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 15 ஏப்ரல், 2010


தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து



சென்னை, ஏப். 13: சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள்: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா: மலர இருக்கும் விக்ருதி ஆண்டு அனைவருக்கும் வளம் கொழிக்கும் ஆண்டாகவும், வளர்ச்சியையும், வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாகவும் விளங்கட்டும்.செயற்கைத் தடைகளைத் தகர்த்தெறிந்து, புதிய வளர்ச்சியையும், மலர்ச்சியையும் தமிழக மக்களுக்கு வழங்கும் வகையில், புதிய சாதனைகள் படைக்கும் ஆண்டாக, சிறப்பான மாற்றங்களை மக்களுக்கு தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்.வைகோ: கத்திரி வெயிலுடன் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருநாள் பிறக்கின்றது. வாசம் சேர்க்கும் வசந்தம் இத்திங்களில் வருவதால், பண்டைத் தமிழர் வசந்த விழாக்களை சித்திரை நாளில் சிறப்புறக் கொண்டாடினர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.இப்போது மக்களை வாட்டும் பிரச்னைகள் மாறி, மக்கள் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் சிறப்புகள் சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.பொன். ராதாகிருஷ்ணன்: உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல் தேதி வரும் புத்தாண்டினை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். தமிழர்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.மழை பொழிந்து, மண் செழித்து விவசாயம் பெருகவும், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவும் இந்த தமிழ்ப் புத்தாண்டு அடித்தளம் அமைத்து தர வாழ்த்துகிறேன்.அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் எஸ்.ஷேக் தாவூத், இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எஸ்.ஜே. இனாயத்துல்லா, நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என். ராமமூர்த்தி, அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கப் பொதுச் செயலாளர் வி. ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கருத்துக்கள்

அரசால் ஆதாயம் அடைந்து கலைஞரின் கைப்பிள்ளையாக வேடமிடும் தினமணி அரசின் கொள்கைக்கு மாறாகச் சித்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டு எனக் குறிக்கலாமா? கிறித்துவப் புத்தாண்டு சனவரி 1 க்கு மாறியபின்பும் ஏப்பிரல் 1இல் கொண்டாடியவர்கள் ஏப்பிரல் முட்டாள்கள் என அழைக்கப்பட்டார்கள். அப்படியாயின் தை முதல் நாளை ஆண்டின் தொடக்கமாக அறிவித்த பின்பும் சித்திரையில் கொண்டாடுபவர்களைச் சித்திரை முட்டாள்கள் என்று சொ்ல்லும் வழக்கம் வருமோ?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
4/15/2010 2:58:00 AM

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

By usanthan
4/15/2010 12:18:00 AM