cheena லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cheena லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 டிசம்பர், 2010

எல்லைச் சிக்கல் இருதரப்பு உறவைப் பாதிக்காது: சீனா

ஏனெனில் இந்தியா எப்பொழுதும் தன் நாட்டு நிலம் பறிபோவதைப்பற்றிக் கவலைப்படாது. அதை மீட்கவும் முயலாது. அடுத்த நாட்டின் பாதுகாப்பு குறித்துத்தான் கவலைப்பட்டுப் பாதுகாப்பு வழங்கும். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லைப் பிரச்னை இருதரப்பு உறவை பாதிக்காது: சீனா


பெய்ஜிங், டிச. 2: இந்தியாவுடன் நிலவும் எல்லைப் பிரச்னை காரணமாக இரு தரப்பு உறவுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக கடந்த 7 ஆண்டுகளில் 13 சுற்று பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது.இதில் இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனும் சீன தரப்பில் அந்நாட்டு பிரதிநிதி தாய் பிங்குவோவும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருதரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நியாயமான, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு விரைவில் ஏற்படும்' என கூறப்பட்டது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

மொழியை புறக்கணிப்பதா சீனாவில் மக்கள் போராட்டம்
 






பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2010,01:20 IST

பீஜிங் : சீனாவில் கேன்டோனீஸ் மொழியை அரசு புறக்கணிப்பதாக கூறி போராட்டம் நடந்தது.சீனாவில் 8 மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இருப்பினும் மாண்டரீன் மொழி தான் அரசு மொழியாக உள்ளது. ஹாங்காங், குவாங்டாங், ஷாங்காய், மக்காவ் உள்ளிட்ட பகுதிகளில் கேன்டோனீஸ் மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது.ஆனால், டிவி மற்றும் ரேடியோக்களில் மாண்டரீன் மொழிகளில் தான் செய்திகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் ஒலிபரப்புவதாக இந்த மொழியை பேசும் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.குவாங்டாங் மாகாணத்தின் தலைநகர் குவாங்சோவில் நேற்று முன்தினம் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டு தங்கள் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி பேரணி நடத்தினர். இரண்டரை மணி நேரம் இந்த பேரணி நடந்தது. வன்முறை நடக்காமலிருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது."சீனாவில் 7 கோடி மக்கள் கேன்டோனீஸ் மொழியை தான் பேசுகின்றனர். எனவே, இந்த மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தினர்.