பொது வாக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது வாக்கெடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மார்ச், 2013

தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்: செயலலிதாவுக்கு வைகோ பாராட்டு

தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்: செயலலிதாவுக்கு வைகோ பாராட்டு
தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்: ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு
சென்னை, மார்ச் 27-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈழத்தமிழருக்கு விடியல் ஏற்பட, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள தீர்மானம், வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது ஆகும்.

துன்ப இருளில் துயரத்தில் பரிதவிக்கும் ஈழத்தமிழருக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், 1976 மே 14 இல், வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில், ஈழத்தமிழர்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைந்து, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகச் செய்த பிரகடனத்தின் வழியிலும், பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் வீரம் செறிந்த போர் நடத்தி, உயிர்த்தியாகங்கள் செய்து, கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தை, சிங்கள அரசு சிதைக்க முனைந்தபோதும், அதை நிர்மாணிக்கின்ற விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற தீர்மானத்துக்கு வரலாறு பொன் மகுடம் சூட்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இதே தீர்மானத்தை, இந்திய நாடாளுமன்றமும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம், அதைச் செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். விடியலின் வெளிச்சத்தைத் தரும் தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்றிய, தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், தமிழகச் சட்டப்பேரவைக்கும், தரணி எங்கும் வாழும் தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

வியாழன், 8 நவம்பர், 2012

ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: மு.க. தாலின்

ஐ.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: இலண்டன் மாநாட்டில் மு.க. தாலின் வலியுறுத்தல்

First Published : 08 November 2012 02:39 AM IST
ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் உலகத் தமிழர் பன்னாட்டு தமிழ் மாநாட்டில் அவர் பேசியது:
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி எங்களை அனுப்பியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது.
ஈழத்தமிழர் பிரச்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனிதச்சங்கிலிகள், உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். 1985-ம் ஆண்டு ஈழப்போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர் ஆதரவாளர் அமைப்பை (டெசோ) உருவாக்கினார்.
போருக்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்காக டெசோ அமைப்பை கருணாநிதி மீண்டும் தொடங்கியுள்ளார்.
12-8-2012-ல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்களின் துயரங்கள், பிரச்னைகள் உள்ளடங்கிய 14 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 
இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான மனுவை நவம்பர் 1-ம் தேதி ஐ.நா.விலும், நவம்பர் 6-ம் தேதி ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் வழங்கியுள்ளோம்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தக்க தருணத்தில் நடைபெறும் இந்த மாநாடு ஈழத்தமிழர்களின் பிரச்னைகளின் மீது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க உதவியாக இருக்கும்.
இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களுக்கு சமத்துவம், கண்ணியம், சுயமரியாதை கிடைக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என ஐ.நா.வும், பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத்தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார் ஸ்டாலின்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

சனி, 3 நவம்பர், 2012

இலங்கைச் சிக்கலுக்குப் பொது வாக்கெடுப்பே தீர்வு :கருணாநிதி

இலங்கை ப்  பிரச்னைக்கு ப் பொது வாக்கெடுப்பே தீர்வு :கருணாநிதி

First Published : 03 November 2012 03:15 PM IST
இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியார்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செய்தியர்ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதன் விவரம் பின்வருமாறு : செய்தியாளர் :- ஐ.நா. சபையில் தளபதி ஸ்டாலின் தாக்கல் செய்த  மனு பற்றிய விவரங்களைத் தெரிவிக்க முடியுமா?
கருணாநிதி:-  ஐ.நா. மன்றத்தில் டெசோ சார்பிலும்,  தி.மு. கழகம் சார்பிலும்,   கழகத்தினுடைய  பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும்,  நாடாளுமன்ற கழகக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் நவம்பர் 1ஆம் தேதி ஈழத் தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வகை செய்யும்  டெசோ மாநாட்டுத் தீர்மானங்களும்,  அதன் அடிப்படையில்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களும் அடங்கிய  விரிவான,  நீண்ட அறிக்கையை   வழங்கியிருக்கிறார்கள்.   அதன் தொடர்ச்சியாக  மனித உரிமை ஆணையத்திலும் இந்த மனுக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஐ.நா. மன்றத்தினுடைய  துணைப் பொதுச் செயலாளர் மனுக்களைப் பெற்றுக் கொண்டு,  இலங்கையில் நடைபெற்ற  - இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலவரங்களைப் பற்றிய விவரங்களை யெல்லாம் மு.க. ஸ்டாலின் மற்றும் பாலுவிடம் நேரடியாகத் தெரிந்துகொண்டு  உரிய நடவடிக்கைகளை  எடுப்பதற்கு  உறுதி அளித்திருக்கிறார்.
டெசோ மாநாட்டின் விளைவாக  விளைந்துள்ள   இந்த முன்னேற்றம் ஈழத் தமிழர்களுடைய  வாழ்வாதாரத்தையும்   அவர்களுடைய அரசியல் எதிர் காலத்தையும்  ஒளிமயமாக  ஆக்குவதற்கு  பயன்படும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்வுகள்  மூலம் நாங்கள் பெற்றிருக்கிறோம்.
ஏற்கனவே  ஈழத்தில் நடைபெற்ற குரூரமான காட்சிகள்  சி.டி. யாகத் தயாரிக்கப்பட்டு  அவற்றையும்  எங்களுடைய வேண்டுகோள் மனுவோடு  இணைத்து தந்திருக்கிறோம்.
இப்போது ஈழத்தில் பல்வேறு  விரும்பத்தகாத  நிகழ்ச்சிகள்  தமிழர்கள்  கண்ணீரும் செந்நீரும் வடிக்கின்ற   அளவுக்கு  நடைபெற்றுள்ள  சூழ்நிலையில் இனி மேலாவது  ஈழத் தமிழர்களுக்கு  விடிவு காலம் ஏற்பட வேண்டும்;   அதற்கு  அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்;  அதற்கான முயற்சிகளை ஐ.நா. மன்றம் எடுத்திட வேண்டும்;  அதற்குத் தேவையான ஒத்துழைப்பை  இந்திய அரசும் வழங்கிட வேண்டும் ஆகிய  இத்தனை கருத்துக்களும் வேண்டுகோள்களும் அடங்கிய ஆவணம் தான் இப்போது ஸ்டாலின், பாலு மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் :-  உங்கள் கோரிக்கையில் பொது வாக்கெடுப்பைத் தான் முக்கியமாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.   அதற்காக நீங்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வீர்களா?
கருணாநிதி :- வலியுறுத்தியிருக்கிறோம்.   டெசோ மாநாட்டில் தீர்மான மாகவே நிறைவேற்றியிருக்கிறோம்.   அந்தத் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கு  இலங்கை அரசை துhண்டி அதற்கான அழுத்தத்தை இந்திய பேரரசும் தந்தாக வேண்டும் என்பது எங்களுடைய கருத்தாகும். மத்திய அரசுக்கு டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்புடைய அமைச்சரிடத்தில் அந்தத் தீர்மானங்கள் விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது.    இந்தியாவிற்குள் தான் நமது தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால்,  தமிழ்நாட்டில் நடைபெற்ற டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அதன் முக்கியத்துவத்தை  இந்தியா உணராமல் இருக்க முடியாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.