குடியரசுத் தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடியரசுத் தலைவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 செப்டம்பர், 2013

அக்டோபர் 9-இல் செம்மொழித் தமிழ் விருதுகள்

இம்முறையாவது செம்மொழி விருது விழாவினைத் தமிழில் நடத்த வேண்டும். தமிழுக்கானவிருதுகளைத் தமிழில் வழங்காமை தமிழை இழிவுபடுத்துவது என்பதை உரியவர்கள் உணரவேண்டும். விட்டுப்போன் விருதுகளையும் மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள் விருதுகளையும் வழங்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஐராவதம் மகாதேவன், தமிழண்ணலுக்கு அக்டோபர் 9-இல் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் விருதுகள்


கல்வெட்டியல் ஆராய்ச்சியாளரும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன், தமிழ் அறிஞர் தமிழண்ணல் ஆகியோருக்கு அக்டோபர் 9-ஆம் தேதி செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
செக். குடியரசைச் சேர்ந்த அறிஞர் ஜரோஸ்லாவ் வசேக், இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞர் ஜான் ரால்ஸ்டன் மார் ஆகியோருக்கு குறள் பீட விருது வழங்கப்பட உள்ளது.
இதே போன்று 10 பேருக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் குடியரசுத் தலைவர் செம்மொழி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

குடியரசுத் தலைவர் இணையத் தள ம் - கருணை மனுப் பிரிவே நீக்கம்!

குடியரசுத் தலைவர் இணைய த் தளத்தில் இருந்து கருணை மனு ப்  பிரிவே நீக்கம்!


குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ இணையதளத்தில் இருந்து, கருணை மனு போடக்கூடிய பிரிவே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான பொதுத்தகவல் வழங்கும் விவகாரம், இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் எண்ணப்படி செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இதுவரை குடியரசுத் தலைவர் முன் காத்திருக்கும் கருணை மனுக்கள் குறித்த விவரங்கள், அவற்றை கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எப்போது சரிபார்த்து கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்ட உடனே, இந்தப் பிரிவு குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ இணையப் பக்கத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில், இந்தப் பிரிவு காணாமல் போனது குறித்து கேட்டதற்கு, குடியரசுத் தலைவர் மாளிகை அளித்த விளக்கத்தில், “கருணை மனு விவகாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால், இந்தப் பிரிவை பொதுவில் வைப்பதைத் தவிர்க்கலாம் என்று யோசனை கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தப் பிரிவுப் பக்கம் நீக்கப்பட்டது. கருணை மனு குறித்த பிரிவையும் எதிர்காலத்தில் உள்துறை அமைச்சகமே கையாளும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 11ம் தேதி இது குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ இணையதளத்தின் ஒரு பக்கமாக குடியரசுத் தலைவரின் செயலர் கட்டுப்பாட்டில் உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. சாய்பன்னா நிங்கப்பா நடிகார் என்ற நபர், தனது மனைவி, மகளைக் கொன்ற விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தகவலுக்குப் பின்னர் கருணை மனு குறித்த பக்கம் இவ்வகையில் இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. இருந்தபோதும், பிப்.9ம் தேதி அப்சல் குரு தூக்கில் இடப்பட்ட பிறகு இந்தப் பிரிவு புதுப்பிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் செயலகம் இன்னொரு புதிய பிரிவையும் இந்த இணையதளத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது. 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட நாடுகள், அந்தப் பயணங்களின் போது, அவருடன் பயணம் செய்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதுவும், அண்மையில் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது, அவருடன் சென்ற பத்திரிகையாளர்கள் விவரங்களை வெளியிட்டு, அதன் பின்னரே இந்தப் பக்கத்தையும் துவக்கியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த கேள்வியின் அடிப்படையில் இந்தப் பிரிவுப் பக்கம் புதிதாக இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனி, 20 நவம்பர், 2010

சாய் பாபா பிறந்த நாள் கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று தெரியவில்லை. சமயத்தலைவர்கள் நிகழ்ச்சியில் நாட்டடின் முதல் குடிமகன் அலலது குடிமகள் பங்கேற்பது தடுக்கப்பட வேண்டும். இவர்கள் அவர்கள் காலடியில் வீழ்வதும் இருக்கைகள் தாழ்வாக இடப்படுவதும்  சமயத்தலைவர்களே மிக உயர்ந்த நிலையில்  உள்ளதாக நடததப்படும் நிகழ்வுகளு்ம் முதல்  குடிமகனை  அல்ல அவர் வழியில் நம்நாட்டை இழிவு படுத்துவதாக்கும். அனைத்துச சமயச் சார்பு நாடாகத் திகழும் நம் நாடு  உண்மையிலேயே சமயச் சார்பற்ற நாடாகத திகழ வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்.
சாய் பாபா பிறந்த நாள் கொண்டாட்டம்: 
குடியரசுத் தலைவர் பங்கேற்பு


சாய் பாபாவின் 85-வது பிறந்தநாளை முன்னிட்டு புட்டபர்த்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தின்போது சாய் பாபாவுடன் பேசுகிறார் குடி
புட்டபர்த்தி, நவ. 19: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 85-வது பிறந்த நாளையொட்டி புட்டபர்த்தியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.ஒவ்வொருவரும் சுய அறிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பெற ஸ்ரீ சத்ய சாய் பாபா மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன் என இந்நிகழ்ச்சியில் பேசுகையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் குறிப்பிட்டார்.சாய் பாபாவின் 85-வது பிறந்த நாள் நவம்பர் 23-ல் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி மகளிர் தினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமென்று தெரியவில்லை. சமயத்தலைவர்கள் நிகழ்ச்சியில் நாட்டடின் முதல் குடிமகன் அலலது குடிமகள் பங்கேற்பது தடுக்கப்பட வேண்டும். இவர்கள் அவர்கள் காலடியில் வீழ்வதும் இருக்கைகள் தாழ்வாக இடப்படுவதும்  சமயத்தலைவர்களே மிக உயர்ந்த நிலையில்  உள்ளதாக நடததப்படும் நிகழ்வுகளு்ம் முதல்  குடிமகனை  அல்ல அவர் வழியில் நம்நாட்டை இழிவு படுத்துவதாக்கும். அனைத்துச சமயச் சார்பு நாடாகத் திகழும் நம் நாடு  உண்மையிலேயே சமயச் சார்பற்ற நாடாகத திகழ வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன். (வைகறைக்கு முன்பே முதலாகப் பதி்ந்தும் முதலாகப் பதிவு இல்லை என்கிறீர்களே ! வாசகர் கருத்தை மதியுங்கள். சமயங்களுக்கு 
அப்பாற்பட்டவராகக் குடியரசுத் தலைவர் வி ளங்க வேண்டும்.)