9/5/2010 4:14:00 AM
9/5/2010 1:21:00 AM
9/4/2010 11:24:00 PM
பேரம் என்று வந்தால் அது முறையாக இருக்க வேண்டும். தேர்தலைக் காரணம் காட்டித் திருவள்ளுவர் சிலை திறப்பு ஒத்திப் போகும் எனில் கன்னடர் சிலையும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டும். கன்னடர் சிலையை முதலில் திறந்து விட்டுப் பின்னர் வழக்கம்போல் அடாவடித்தனம் செய்து திருவள்ளுவர் சிலை திறப்பிற்குத் தடை போடலாம். ஆனால், இந்தியா ஒரே நாடு என்ற உணர்வு தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் குறிப்பிட்ட திருவள்ளுவர் சிலையைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்து 'குறுமனம் கொண்டவர்களால் பெங்களூரில் திறக்கப்டாத திருவள்ளுவர் சிலை இதுதான்! இந்தியாவின் முதல குடிமகனாக ஒரு தமிழர் இருந்த பொழுதும் திறக்கப்படாமல் போன திருவள்ளுவர் சிலை இதுதான்! ' என்னும் குறிப்புடன் திறந்து வைக்கப்பட வேண்டும். இனியும் இந்த மானக் கேட்டை நீட்டித்துக் கொண்டே போவதில் பொருள் இல்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்