உண்ணா நோன்புப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்ணா நோன்புப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூன், 2012

சிறப்பு முகாம்வாசி திரு. பராபரன் அவசரமாய் மருத்துவமனையில் சேர்ப்பு

உருக்கமான கடிதம் எழுதிய உண்ணாநிலை சிறப்பு முகாம்வாசி திரு. பராபரன் அவசரமாய் மருத்துவமனையில் அனுமதி
http://www.manitham.net/
கடந்த 15ம் தேதி காலை முதல் தமிழக அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட விடுதலை உறுதிமொழியினை நடைமுறை படுத்தக்கோரி ஆறு செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.  இவர்களோடு, மேலும் இருவர் சேர்ந்துள்ளதால், தற்போது 8 பேர் உண்ணாநிலையில் பங்கெடுத்து வருகின்றனர்.
வலிப்பு நோயும், தண்டுவட சிதைவுமுள்ள திரு. பராபரன் உண்ணாநிலை ஆரம்ப நாளிலிருந்து மருந்து எதுவும் எடுக்காமல் உண்ணாநிலையில் பங்கெடுத்துக் வந்ததால், நேற்று தீடீரென உடல்நிலை மோசமானது. ஆதனால், அவசரமாக செங்கல்பட்டு மருத்துவமனையிலிருந்து இரு மருத்துவர்கள் உண்ணாநிலை மேற்கொள்வோரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். திரு. பராபரனின் உடல் நிலைய மோசமானதை கருத்தில் கொண்டு, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறி, அவசர ஊர்தி வருவழைக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே திரு. பராபரனின் நெஞ்சை உருக்கமான 2 பக்க கடிதம்  நேற்று மனிதம் என்ற மனித உரிமை அமைப்பிற்கு கிடைத்துள்ளது. கடிதத்தோடு, அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவரின் சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது. அவரது கடிதத்தில், இலங்கையின் இனப்படுகொலையிலிருந்து உயிரை தக்க வைத்துக் கொள்ள 'தொப்புள் கொடி உறவு' என்ற நினைத்து தமிழகம் வந்தோம் என்றும், தான் குடும்பத்தோடு இணைந்தில்லாததினால், தனது மனைவி மற்றும் குடும்பம் வறுமை காரணமாக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாயும், இதனாலேயே விடுதலை வேண்டி, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உண்ணாநிலை மேற்கொண்டதாய் கூறியுள்ளார். 
மனிதம் அமைப்பிற்கு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 29 ஈழ ஏதிலிகளும் திரு. பராபரனின் கடிதம் போன்றே மனு கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து மனுக்களையும், தமிழக முதல்வருக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் சேர்க்கவும், இவர்களின் விடுதலைக்கான மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மனிதம் அமைப்பின் தலைவர் அக்னி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
- திரு. பராபரனின்  கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
- காணொளிகள் :
  1. மருத்துவர் பரிசோதனை : http://youtu.be/7cKI3tJeC8o
  2. திரு. பராபரன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுதல் : http://youtu.be/CjT7PQUy7NM
www.manitham.net
manitham@gmail.com
2 attachments — Download all attachments   View all images   Share all images  
pg1.jpgpg1.jpg
349K   View   Share   Download  
pg2.jpgpg2.jpg
383K   View   Share   Download  
YouTube - Videos from this email









வியாழன், 23 ஜூலை, 2009

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 60 அகதிகள் உண்ணாவிரதம்



செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 60 பேர் புதன்கிழமையிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்முகாமில் மொத்தம் 85 பேர் பல்வேறு வழக்குகளில் க்யூ பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இம்முகாமில் உள்ள செல்வக்குமார், ஜெயதாசன், சத்யசீலன் ஆகிய 3 பேர் கடந்த 6 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று பேருடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் மேலும் முகாமில் உள்ள 60 பேர் புதன்கிழமையில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமில் சுதந்திரமாக வைக்கவும், தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யக் கோரியும், வழக்குகளை துரிதப்படுத்தி விரைவில் தங்கள் மீதுள்ள வழக்குகளை விசாரித்து வழக்கிலிருந்து விடுத்து தங்கள் குடும்பத்துடனும், உறவினர்களுடன் சேர்த்து வைக்கக் கோரியும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். போலீஸ் டிஸ்பி பாலசுப்ரமணியம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் வில்சன், க்யூ பிரிவு டிஸ்பி விஸ்நாதன் உள்ளிட்ட போலீஸôரும் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துக்கள்

. . . . . எனவே, தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அப்பாவிகளை விடுவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் இச்சிக்கலில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் மூலமாக நீதி கிடைக்க உடனே உதவ வேண்டும்.

அப்பாவிகளின் துயர நிலை கண்டு வருந்தும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 3:33:00 AM

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது குற்றச்சாட்டு இருப்பின் வழக்கு தொடுத்து நீதி மன்ற உசாவல் மேற்கொண்டு தீர்ப்பிற்கேற்ப தண்டனை அல்லது விடுதலை வழங்க வேண்டும். தண்டனை வழங்கப்பட்டால் தண்டனைக் காலம் முடிந்தால் விடுதலை செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் கால வரையறையின்றி இங்கு அடைத்து வைப்பது முறையன்று. இங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவும் சிலர் உள்ளனர்; தண்டனைக் காலம் முடிந்த பின்னும் சிலர் உள்ளனர்; விசாரணை மேற்கொள்ளப்படாமலேயே சிலர் உள்ளனர். ஆயுள் தண்டனை என்றாலேயே 20 ஆண்டுகள் என வரையறை செய்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் குழு மூலம் விடுதலை செய்யும் தமிழக அரசு இவர்களை மட்டும் தொடர்ந்து வதைமுகாம்களில் அடைத்து வைப்பது முறையன்று. தமிழக ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் நாட்டுப்பற்றை மெய்ப்பிப்பதாக எண்ணிக் கொண்டு இந்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு அறமற்ற முறைகளில் தடுத்து வைப்பது முறைதானா? இலங்கைத் தமிழரர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைப் பொருள்களை வழங்கியதைக் கூடக் கடுங்குற்றமாகக் கருதி வதைப்பது முறைதானா? . . .-

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 3:33:00 AM