அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 பிப்ரவரி, 2017

அ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்! - இலக்குவனார் திருவள்ளுவன்




அ.தி.மு.க.,   
பதவி  நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்!

  ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின் அடிப்படையில் கொடுத்ததாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. பதவி விலகல் ஏற்பிற்குப்பின்னர்,  ஆளுநருக்கும் தலைமையமைச்சருக்கும் நன்றி மடல்கள் அனுப்பியுள்ளார்.  எவ்வாறிருப்பினும் ஆளுங்கட்சியின் நம்பிக்கையை இழந்தபின்னர், பதவி கோரும் உரிமையில்லை.
  ஆனால்,  சட்ட அடிப்படையில்லாத இவரின் கோரிக்கையை அடிப்பைடயாக வைத்துப்,  பேர வணிகத்திற்கு இடமளிக்கும் வகையில், ஆளுநர்  பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு உள்ள எடப்பாடி க.பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
இச்சசூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, பன்னீர்செல்வம்  மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும்,  அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்து, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்குமாறு ஆளுநருக்கு வேண்டுகோள் தீ்ர்மானம் இயற்ற வேண்டும். முதல்வர் பதவியைக் கோரும் உரிமை பன்னீர்செல்வத்திற்கு இல்லை என்பதை உணர்த்தவே இந்தத் தீர்மானம்.

  முன்னர் அளித்த தீர்மானத்தின்படி, அவர்கள், எடப்பாடி க.பழனிச்சாமியைத் தங்கள் தலைவராக ஏற்றுள்ளதாகவும் அவரை ஆட்சி  அமைக்க அழைக்க  வேண்டும் என்றும் இரண்டாம் தீர்மானம் இயற்ற வேண்டும்.

 இத்தீர்மானங்களை ஆளுநருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆளுநர் வித்தியாசாகர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் பல்வேறு வழக்குகள் முளைத்து, மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

புதன், 8 மே, 2013

உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழ்: அதிமுக நா.உ. வலியுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக த் தமிழ்: அதிமுக நா.உ. வலியுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஆ. இளவரசன் வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் முக்கிய பிரச்னைகளை சிறப்புக் கவனத்திற்குக் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட போது, அவர் முன்வைத்த கோரிக்கை வருமாறு:
தமிழக நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக தமிழை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து, மத்திய அரசை தமிழக முதல்வர் பல முறை வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்ற விசாரணைகள், உத்தரவுகள், தீர்ப்புகளில் மாநில அலுவல் மொழியை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைக்கும் அலுவல் மொழிகள் சட்டம் 1963-இன் பிரிவு 7, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 348 (2) ஆகியவற்றை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழைப் பயன்படுத்தும் போது வழக்கு விசாரணைகள் மற்றும் விவரங்களை சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்று இளவரசன் கூறினார்.

செவ்வாய், 7 மே, 2013

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய கட்சியைத் தேடுகின்றனர்: வைகோ

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய கட்சியைத் தேடுகின்றனர்: வைகோ

திமுக, அதிமுகவுக்கு மாற்றான புதிய சக்தியை மக்கள் தேடத் துவங்கியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுகவின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.இதனையொட்டி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மதிமுக கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-
மக்களின் நல் ஆதரவோடு மதிமுக 20-ம் ஆண்டை எட்டிப் பிடித்துள்ளது.சென்ற சட்டப்பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்தது.எனினும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக உள்ளோம்.ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, ஸ்டெர்லைட் ஆலை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்ற போராட்டக் களங்களில் மதிமுக ஆக்கப்பூர்வமாகப் போராடியுள்ளது.பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி பல கட்டங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
மதுக் கடைகள் அகற்ற வலியுறுத்தி 3 கட்டங்களாகப் பேராட்டம் நடத்தியுள்ளோம்.இந்தப் போராட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக புதிய சக்தியைத் தேடும் படலம் மக்கள் மத்தியில் தொடங்கி இருக்கிறது. எனவே மக்கள் எதிர்பார்பை ஈடு செய்யும் வகையில் மதிமுக தொடர்ந்து மக்கள் பிரச்னைக்காகப் போராடும் என்றார் அவர்.