மகுடையில் இருந்து காத்திட…


அஞ்சுவதற்கு அஞ்சு!
ஆற்றாமை வேண்டா!
இல்லத்திலேயே இரு!
ஈட்டமாய்(கூட்டமாய்) இராதே!
உறவாயினும் விலகி நில்!
ஊருக்குள் போகாதே!
எச்சரிக்கையாய் இரு!
ஏதுமிலார்க்கு உதவு!
ஐயம் வந்தால் மருத்துவரைப்பார்!
ஒவ்வொன்றிலும் தூய்மை பார்!
ஓராது நம்பாதே!
ஒளதம்(நோய் நீக்கி) உட்கொள்!
இலக்குவனார் திருவள்ளுவன்