எங்களுக்காக உழைப்பார்உண்டோ!?
உழைத்தோம்
உழுதோம்
உணவின்றி
வாடுகிறோம்

உழைத்தோம்
நெய்தோம்
துணியின்றி
ஏங்குகிறோம்

உழைத்தோம்
கட்டினோம்
வீடுஇன்றி
அலைகிறோம்

உழைத்தோம்
பிறருண்ண
பிறருடுக்க
பிறர்வசிக்க

எங்களுக்கு
எல்லாம்
கிடைக்க
உழைப்பார்
உண்டோ!?
இலக்குவனார் திருவள்ளுவன்