Mohenjodaro_Sindhuthamizhar-civilization01

சிந்துவெளித் தமிழர் நாகரிகம்

ஆரியர்க்கு முற்பட்டது; சுமேரியர் நாகரிகத்தினும் மிக உயர்ந்தது!

  நல்ல திட்டங்கள் தீட்டி இங்குச் சிறந்த நல்வாழ்வு(சுகாதார) முறையில் நகரங்களை அமைத்தவர்கள் சிந்து மண்டில மக்களே ஆவார்கள்.
  இத்தகைய திட்டம் கி.மு.2000 வரை “உர்’ என்னும் நகரில் தோன்றியதாகக் கூறல் இயலாது. அதே காலத்தில்தான் பாபிலோனியாவிலும் இத்திட்டம் தோன்றியது. எகிப்தில் உள்ள கஃகூன் என்னும் நகரில் பன்னிரண்டாம் அரசு பரம்பரையினர் ஆண்ட காலத்தேதான் இது போன்ற திட்டம் தோன்றியது. எனவே, மிக்க புகழ் படைத்த எகிப்தியரும் பாபிலோனியரும் சுமேரியரும் அப்பழங்காலத்தில் கண்டிராத நகர அமைப்பு முறையை இச்சிந்து மக்கள் கையாண்டிருந்தனர் எனின் அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டிலேயே இருந்து இம்முறைகளில் மிகத் தேர்ந்தவராதல் வேண்டும்.
 ஏறக்குறைய கி.மு.1500இல் இந்தியாவுக்கு வந்த ஆரியர்க்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக மிக உயர்ந்த நாகரிகத்தில் திளைத்தனராதல் வேண்டும்.
  அவர்களது நாகரிகம் சுமேரியர் காலத்தவர் தம் நாகரிகங்களைவிட மிக உயர்ந்ததாகும்.
அறிஞர் மக்கே : இந்து நாகரிகம் : பக். 11& 12