துபாயில் பள்ளி மாணவர்கள்


தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த

dubai-iftar

நோன்பு முடிப்பு நிகழ்ச்சி

  துபாய் : துபாயில் பசுமைஉலகம் (‘கிரீன் குளோப்’) என்ற அமைப்பினை சார்சா பள்ளி மாணவர் உமைத்து அபுபக்கர் ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் முதலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார்.

  இவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ சீனத்து தொழிலாளர் முகாமில் நோன்பு முடிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்வில் தொழிலாளர் முகாமில் உள்ள தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேலும் இளம் அகவையில் சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்ற அக்கறையில் செயல்பட்ட மாணவர்களை பாராட்டினர்.
உமைத்து அபுபக்கர் சுற்றுச்ச்சுழல் விழிப்புணர்வின் தேவை குறித்து விவரித்தார்.
ஈடிஏ நலத்துறை அலுவலர் அகமது சுலைமான் சேக்கு அம்தார் விருது பெற்ற உமைத்து அபுபக்கரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.
நோன்பு முடிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர்களுக்குப் புத்தாடைகளும் பரிசளிக்கப்பட்டன.
நிகழ்விற்கான ஏற்பாடுகளில் அகமத்து சுலைமான், முசுதபா, தமீம் அன்சாரி, அபுபக்கர், இரகமத்துல்லா, ஃபைசல் முதலானோர் உதவி புரிந்தனர்.
மாணவரின் மின்னஞ்சல் தொடர்பு முகவரி :
தரவு : முதுவை இதாயத்து