செவ்வாய், 15 அக்டோபர், 2013

தியாகு உண்ணாநோன்பைக் கைவிட கருணாநிதிக்கு மன்மோகன் மடல்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82682220131015013732.jpg
பொதுநலமாநாட்டில் பங்கேற்பா? கருணாநிதிக்கு மன்மோகன் மடல்

Photo: எத்தனையோ வாக்குறுதிகளை நம்பி வந்த நாம் இதனையும் நம்புவோம்_செந்தமிழ்பாலா
**************************************************

தமிழுணர்வாளர்,தோழர்.தியாகு அவர்கள், இந்திய தலைமையமைச்சரின் வேண்டுகோளினை ஏற்று, தம் உணாமறுப்புப் போராட்டாத்தினை முடித்துக் கொள்ள வேண்டுமென, தமிழ்கூறு நல்லுலகத்தினருடன் இணைந்து பணிவுடன் வேண்டுகின்றோம்.

தமிழீழ மண்ணை யாமிழந்த நிலையில், உம்மைப் போன்றோரின் இருப்பினடிப்படையிலேயே, மீண்டும் எம் மண்ணைப் பெறுதல் இயலக்கூடியதுதான் எனும் நம்பிக்கையிலிருக்கின்றோம்_செந்தமிழ்பாலா

சென்னை: "இலங்கையில், நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய முடிவுகளை எடுப்போம்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
""இலங்கையில், அடுத்த மாதம், நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,'' என, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர், தியாகு,உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது, என, தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன்சிங்கை, நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க.,தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுவது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய நல்ல முடிவை எடுப்போம், தியாகுவின் உண்ணாவிரத்தை கைவிட, அவரை வற்புறுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக