சனி, 26 ஜனவரி, 2013

இராசபக்சே வந்தால் மன்மோகன்சிங் வீடுமுற்றுகை வைகோ

இனிமேல் இராசபக்சே இந்தியாவுக்கு வந்தால்  மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிட வேண்டும்: வைகோ பேச்சு
இனிமேல் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தால் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிட வேண்டும்: வைகோ பேச்சு
தரங்கம்பாடி,சன.26-

நாகை மாவட்டம் மயிலாடு துறையில் ம.தி.மு.க. சார்பில் மொழிபோர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மொழிபோர் தியாகிகளின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது-

மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி தமிழர்களை கொண்று குவித்து வருகிறது. கொலை குற்றவாளி ராஜபக்சேவை குற்றம் சாட்டுவது போல் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசும் நாடகமாடி வருகிறது.

தமிழர்களின் கொலைக் குற்றத்திற்கு காரணமான ராஜபக் சேவையும், அவருக்கு துணை நிற்பர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும். இனிமேல் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. இதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. அதன் விளைவாக இன்றும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை.

தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முல்லை, பெரியார், காவிரி பிரச்சினை அந்தந்தப்பகுதி பிரச்சினை என்று பாராமல், ஒட்டுமொத்த தமிழர்களும் இதில் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டா பகுதி விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கான முழுப்பொறுப்பு மத்திய அரசு தான்.

இவ்வாறு வைகோ பேசினார்.

கூட்டத்தில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாநில துணைச்செயலாளர் மார்கோணி, மாவட்ட அவைத்தலைவர் வீராச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக