வெள்ளி, 23 டிசம்பர், 2011

agitation for mullai periyaaru at karur: தென் மாவட்டங்களில் கடையடைப்பு ~ முல்லைப் பெரியாறு


தென் மாவட்டங்களில் கடையடைப்பு ~ முல்லைப் பெரியாறு

பதிவு செய்த நாள் : 22/12/2011


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாளை (23-12-2011) கரூர் மாவட்ட தமிழர் உரிமை மீட்புக்குழு சார்பில் கரூரில் முழு நாள் கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று (22/12/2011) முழு கடையடைப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு வணிகர் சங்கங்கள் உட்பட தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழ்நாடு உணவுபொருள் வியாபாரிகள் சங்கம், மடீட்சியா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர் சங்க பேரவை, மதுரை நகைவியாபாரிகள் அமைப்பு, மதுரை பட்டு வியாபாரிகள் சங்கம், முல்லை பெரியாறு அறவழி போராட்டக்குழு, வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட் வர்த்தக சங்கம் உள்பட சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக