புதன், 10 ஆகஸ்ட், 2011

ஈழச்சிக்கல் - மாநிலங்கள் அவையில் விவாதம்

இந்தியப் பொதுவுடைமைக்கட்சி ,தமிழினப் பகைக்கட்சி. ஆதரவாளர்போல் நடித்து. ஒன்றுபட்ட இலங்கையில் தன்னாட்சி என்ற கருத்தை வலியுறுத்தித் தமிழ்ஈழ விடுதலையைத் தள்ளிப் போடச் செய்யும் சதிகாரக்கட்சி. எனினும் பிற கட்சிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திச்சிங்களத்தின் இனப்படுகொலைகளைப்பற்றி உலகறியச் செய்து மாநிலங்கள் அவையில் பதிவு செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

நான் இ.பொ.க. என மார்க்சியக் கட்சியை (சி.பி.எம்.) குறிப்பிட்டுள்ளேன்.

ஈழப்பிரச்சினை: மாநிலங்கள் அவையில் விவாதம்

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் கொண்டு வரப்படும் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்வரும் வியாழக்கிழமை விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அறிவித்தல் விடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா, விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மார்க்சிஸ்ட் சார்பாக டி.கே. ரங்கராஜன், பாஜக சார்பில் வெங்கைய நாயுடு, காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக