சனி, 7 மே, 2011

kalaignar greets semmozhi awardees: செம்மொழி விருது பெற்றவர்களுக்குக் கருணாநிதி வாழ்த்து

எஞ்சிய தொல்காப்பியர் விருதுகள் ௨ ஐயும் குறள்பீட விருதுகள் 2 ஐயும் வழங்குவது எப்போது?  பிற மொழிகளுக்கு வழங்குவதுபோல் மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள்முழுவதும் விருதுத் தொகை வழங்கும் செம்மொழி விருதுகள் எப்பொழுது வழங்கப்படும்? தமிழ்மொழிக்கு மத்திய அரசால் காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை எப்போது ஒழியும்?  செம்மொழிக்குப் போராடிய முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் யார் எடுப்பார்கள்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



செம்மொழி விருது பெற்றவர்களுக்கு கருணாநிதி வாழ்த்து

First Published : 07 May 2011 05:30:41 AM IST


சென்னை, மே 6: "செம்மொழி' விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தில்லி நீதிமன்றத்தில் என் இளைய மகள் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் "செம்மொழி' விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்கள் தில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.2005-06-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதை பேராசிரியர் அடிகளாசிரியரும், 2006-07-ம் ஆண்டுக்கான குறள் பீடம் விருதை பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டும் பெறுகின்றனர். இந்த இரண்டு பரிசுகளும் தலா ரூ.5 லட்சம் சிறப்பு பரிசு கொண்டவை. இதோடு ரூ.1 லட்சம் சிறப்பு பரிசு கொண்ட இளம் அறிஞர் விருதுகளும் வழங்கப்படுகின்றன.தமிழ் உலகம் நீண்ட நெடுங்காலமாகவே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறபோது எனது நினைவுகளில் பல நிகழ்ச்சிகள் தோன்றிப் பளிச்சிடுகின்றன.குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது பெறும் தமிழறிஞர்கள் அனைவரையும் சென்னையிலிருந்தவாறே மனதார வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

1 கருத்து:

  1. கருத்துகள் வெளியிடப்படாமையால் மீள்பதிவு செய்துள்ளேன். வாழ்க தினமணியின் நடுவுநிலைமை.

    பதிலளிநீக்கு