செவ்வாய், 3 மே, 2011

hunger strike in chengalpattu camp: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 6-வது நாளாக உண்ணாவிரதம்

௧௪ ஆவது நாட்களாக உண்ணாநிலை மேற்கொ்ண்டுள்ளனர். தினமணியோ ௬ நாள் என்கிறது. மற்றோர் இதழோ பார்வையாளர்கள் தரும் உணவுப் பொருள்களை உண்டு உண்ணா நோன்பு இருப்பதாகக் கேலி பேசுகிறது. ஏன் இந்த இருட்டடிப்பு? தினமணி நடுநிலையோடு ஆராய்ந்து உண்மையை உலகிற்குத் தெரிவிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 6-வது நாளாக உண்ணாவிரதம்

First Published : 03 May 2011 01:31:39 AM IST


செங்கல்பட்டு, மே 2: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 27 இலங்கை அகதிகள் 6-வது நாளாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் கியூ பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 40 பேர் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜனவரி 7-ம் தேதி 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பிப்ரவரி 28-ல் விடுதலை செய்வதாக கூறினர். 2 மாதமாகியும் விடுதலை செய்யாததால் மீண்டும் ஏப்ரல் 27 முதல் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாள் காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆனந்தகுமார், ஜெயக்குமார் ஆகிய இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக