தி.மு.க.விற்குத் தோல்வியாக இருக்கலாம். ஆனால், கலைஞருக்கு வெற்றிதான். பிளவிற்குக் காரணம் தொகுதி எண்ணிக்கையும்தான் என்று சொன்னாரே தவிர அதுதான் முழுமுதல் காரணம் என்று சொல்லவில்லை. அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரிந்திருந்தாலும் ஓர்
இடம்கூடக் குறைக்காமல் ௬௩ என்று ஒத்துக் கொண்டார் என்றால் அவரது கோரிக்கை நிறைவேறி உள்ளது என்றுதான் பொருள்.
காய் முற்றும்பொழுது கடைத்தெருவிற்கு வந்துதான் ஆகும். அப்பொழுது புரியும். அவரது வெற்றியை. ஆனால் என்ன? இந்தச்
சாணக்கியத்தனத்தைத் தமிழினப் பாதுகாப்பிற்குக் காட்ட மாட்டேன் என்கிறாரே
என்பதுதான் வருத்தம்.
இடம்கூடக் குறைக்காமல் ௬௩ என்று ஒத்துக் கொண்டார் என்றால் அவரது கோரிக்கை நிறைவேறி உள்ளது என்றுதான் பொருள்.
காய் முற்றும்பொழுது கடைத்தெருவிற்கு வந்துதான் ஆகும். அப்பொழுது புரியும். அவரது வெற்றியை. ஆனால் என்ன? இந்தச்
சாணக்கியத்தனத்தைத் தமிழினப் பாதுகாப்பிற்குக் காட்ட மாட்டேன் என்கிறாரே
என்பதுதான் வருத்தம்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி!/
First Published : 08 Mar 2011 08:03:26 PM IST
Last Updated : 08 Mar 2011 08:04:49 PM IST
சென்னை, மார்ச் 8- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை முதல்வர் கருணாநிதி இன்று மாலை அறிவித்தார்.கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:திமுக - 121 காங்கிரஸ் - 63 பாமக - 30 விடுதலைச் சிறுத்தைகள் - 10கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - 7இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1
கருத்துகள்
By மூர்த்தி
3/8/2011 10:05:00 PM
3/8/2011 10:05:00 PM
By maraicar
3/8/2011 9:53:00 PM
3/8/2011 9:53:00 PM
By ரியல் tamilan
3/8/2011 9:52:00 PM
3/8/2011 9:52:00 PM
By ரியல் tamilan
3/8/2011 9:50:00 PM
3/8/2011 9:50:00 PM
By siva
3/8/2011 9:47:00 PM
3/8/2011 9:47:00 PM
By parandhaman
3/8/2011 9:40:00 PM
3/8/2011 9:40:00 PM
By perin
3/8/2011 9:36:00 PM
3/8/2011 9:36:00 PM
By வெங்கடேஷ்
3/8/2011 9:28:00 PM
3/8/2011 9:28:00 PM
By ராம்குமார்
3/8/2011 9:13:00 PM
3/8/2011 9:13:00 PM
By தமிழன்.K
3/8/2011 9:05:00 PM
3/8/2011 9:05:00 PM
By dheenadhayalan
3/8/2011 8:59:00 PM
3/8/2011 8:59:00 PM
By bala
3/8/2011 8:58:00 PM
3/8/2011 8:58:00 PM
By சந்துரு
3/8/2011 8:57:00 PM
3/8/2011 8:57:00 PM
By srinivasan
3/8/2011 8:55:00 PM
3/8/2011 8:55:00 PM
By bakrutheen
3/8/2011 8:45:00 PM
3/8/2011 8:45:00 PM
By jerry
3/8/2011 8:25:00 PM
3/8/2011 8:25:00 PM
By Ravichandran
3/8/2011 8:23:00 PM
3/8/2011 8:23:00 PM
By ஜோவலன் வாஸ்
3/8/2011 8:15:00 PM
3/8/2011 8:15:00 PM
By selvin selvaa
3/8/2011 8:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/8/2011 8:14:00 PM
சென்னை: "மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல்' என்ற முடிவை தி.மு.க., எடுத்ததற்கு கோபமடைந்த சோனியா, காங்கிரசுக்கு 63 சீட்கள் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். வீராப்பு பேசிய தி.மு.க., வேறு வழியின்றி 63 சீட்களை ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது. தி.மு.க., 61 தொகுதிகளையும், கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
"காங்கிரசின் அணுகுமுறை, கூட்டணியில் நாம் இருப்பதை விரும்பவில்லை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகும். பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்' என்று, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என மிரட்டினால், காங்., இறங்கி வரும் என எதிர்பார்த்தது தி.மு.க., ஆனால், மவுனம் காத்தது காங்., தி.மு.க.,வின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திசெல்வன் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதத்தோடு டில்லி சென்றனர். நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை தராமல் காலம் தாழ்த்தினர். மத்திய காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், பிரணாப் முகர்ஜி என ஒவ்வொருவரிடமும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏன் நெருக்கடி தருகிறீர்கள்: இவர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, " பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிக்கும் இந்த நேரத்தில், அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து நெருக்கடியை ஏன் தருகிறீர்கள்' என்று கேட்டார். மேலும், "இரண்டு கேபினட் அமைச்சர்கள் விலகினால், அதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி, அதற்கு, எதிர்க்கட்சிகள் பிரதமரின் பதிலை பார்லிமென்டில் தாக்கல் செய்யக் கேட்பார்கள். இதனால், தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்' என்றும் தி.மு.க., அமைச்சர்களிடம், பிரணாப் முகர்ஜி கூறினார்.
சோனியா கோபம்: முகர்ஜியின் கேள்விக்கு தி.மு.க., அமைச்சர்கள் பதில் ஏதும் கூற முடியாமல் திணறினர். காங்., தலைவர் சோனியாவை நேற்று முன்தினம் இரவு தி.மு.க., அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது, "என்னிடம் கூறாமல் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை ஏன் எடுத்தீர்கள். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏழு ஆண்டுகளாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில், தி.மு.க., - காங்கிரஸ் உறவு நன்றாகவே இருந்துள்ளது. தி.மு.க., உடன் மனக்கசப்பு இருந்தால் கூட காங்கிரஸ் வெளிப்படையாகக் கூறவில்லை. தற்போது நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்துக் கூட காங்கிரஸ் வெளியில் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் வருத்தம் ஏற்பட்டதாகவும், அதனால், அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாகவும் தி.மு.க., வெளிப்படையாகக் கூறியது தவறு' என்று சோனியா கோபப்பட்டார். அதற்கு பதிலளிக்காத தி.மு.க., அமைச்சர்கள், 60 சீட்கள் தருவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், 63 தொகுதிகள் என்பதில் சோனியா உறுதியாக இருந்தார். கடைசியாக, முதல்வருடன் மத்திய அமைச்சர் அழகிரி பேசி, 61 தொகுதிகள் தருவதற்கு முன்வந்தார்.காங்கிரஸ் தரப்பு தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, கூட்டணி கட்சியினருடன் தி.மு.க., தரப்பில் பேசப்பட்டது.
தி.மு.க., சார்பாக, 61 தொகுதிகள் தரவும், ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பா.ம.க., - கொங்கு, முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றில் இரண்டு கட்சிகள், தலா ஒரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் முடிவில், 63 தொகுதிகளை தர தி.மு.க., சம்மதித்தது. ஆனாலும், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, மீதமுள்ள 15 தொகுதிகளை தாங்களே தேர்வு செய்வோம் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதன் காரணமாக, நேற்று இரு தரப்பிலும் அவசர ஆலோசனைகள் நடந்தன. அதில், காங்கிரஸ் எட்டு தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளவும், மீதமுள்ள ஏழு தொகுதிகளை பொறுத்தவரை, தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த உடன்பாட்டுக்கு காங்கிரஸ் சம்மதித்தது. இதையடுத்து, நேற்று மாலை உடன்பாடு ஏற்பட்டதாக குலாம்நபி ஆசாத் அறிவித்தார். காங்கிரஸ் விரும்பியபடி 63 தொகுதிகளை கடைசியாக பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது.
கொள்கை, சுயமரியாதை முக்கியமாம்: காங்கிரஸ் உறவு முறிவு குறித்து தி.மு.க., ஆதரவு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்
தி.க., தலைவர் கி.வீரமணி அறிக்கை: குட்டக்குட்ட தி.மு.க., குனியக்கூடாது. காங்., இல்லாமல் போட்டியிட தி.மு.க., தயாராக வேண்டும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை காப்பதுதான் தி.மு.க.,வின் அடிப்படை லட்சியம். பதவிகளை விட கொள்கைகளும் அவற்றைபரப்பும் இயக்கமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுநடந்தால் அனைவருக்கும்நல்லது. கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.,வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி: தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் முடிவு, கூட்டணியை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. இந்த முடிவால் கூட்டணி பலவீனமாகாது. தி.மு.க., அரசு தனிப் பெரும்பான்மையோடும், வலுவோடும், தமிழகத்தில் அமையும். தி.மு.க.,வின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் அறிக்கை: மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்னைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதும் என்றும், தி.மு.க.,வின் உயர் மட்ட செயற்குழு முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், தி.மு.க., சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர்.
"காங்கிரசின் அணுகுமுறை, கூட்டணியில் நாம் இருப்பதை விரும்பவில்லை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகும். பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்' என்று, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என மிரட்டினால், காங்., இறங்கி வரும் என எதிர்பார்த்தது தி.மு.க., ஆனால், மவுனம் காத்தது காங்., தி.மு.க.,வின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திசெல்வன் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதத்தோடு டில்லி சென்றனர். நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை தராமல் காலம் தாழ்த்தினர். மத்திய காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், பிரணாப் முகர்ஜி என ஒவ்வொருவரிடமும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏன் நெருக்கடி தருகிறீர்கள்: இவர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, " பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிக்கும் இந்த நேரத்தில், அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து நெருக்கடியை ஏன் தருகிறீர்கள்' என்று கேட்டார். மேலும், "இரண்டு கேபினட் அமைச்சர்கள் விலகினால், அதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி, அதற்கு, எதிர்க்கட்சிகள் பிரதமரின் பதிலை பார்லிமென்டில் தாக்கல் செய்யக் கேட்பார்கள். இதனால், தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்' என்றும் தி.மு.க., அமைச்சர்களிடம், பிரணாப் முகர்ஜி கூறினார்.
சோனியா கோபம்: முகர்ஜியின் கேள்விக்கு தி.மு.க., அமைச்சர்கள் பதில் ஏதும் கூற முடியாமல் திணறினர். காங்., தலைவர் சோனியாவை நேற்று முன்தினம் இரவு தி.மு.க., அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது, "என்னிடம் கூறாமல் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை ஏன் எடுத்தீர்கள். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏழு ஆண்டுகளாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில், தி.மு.க., - காங்கிரஸ் உறவு நன்றாகவே இருந்துள்ளது. தி.மு.க., உடன் மனக்கசப்பு இருந்தால் கூட காங்கிரஸ் வெளிப்படையாகக் கூறவில்லை. தற்போது நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்துக் கூட காங்கிரஸ் வெளியில் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் வருத்தம் ஏற்பட்டதாகவும், அதனால், அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாகவும் தி.மு.க., வெளிப்படையாகக் கூறியது தவறு' என்று சோனியா கோபப்பட்டார். அதற்கு பதிலளிக்காத தி.மு.க., அமைச்சர்கள், 60 சீட்கள் தருவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், 63 தொகுதிகள் என்பதில் சோனியா உறுதியாக இருந்தார். கடைசியாக, முதல்வருடன் மத்திய அமைச்சர் அழகிரி பேசி, 61 தொகுதிகள் தருவதற்கு முன்வந்தார்.காங்கிரஸ் தரப்பு தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, கூட்டணி கட்சியினருடன் தி.மு.க., தரப்பில் பேசப்பட்டது.
தி.மு.க., சார்பாக, 61 தொகுதிகள் தரவும், ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பா.ம.க., - கொங்கு, முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றில் இரண்டு கட்சிகள், தலா ஒரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் முடிவில், 63 தொகுதிகளை தர தி.மு.க., சம்மதித்தது. ஆனாலும், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, மீதமுள்ள 15 தொகுதிகளை தாங்களே தேர்வு செய்வோம் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதன் காரணமாக, நேற்று இரு தரப்பிலும் அவசர ஆலோசனைகள் நடந்தன. அதில், காங்கிரஸ் எட்டு தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளவும், மீதமுள்ள ஏழு தொகுதிகளை பொறுத்தவரை, தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த உடன்பாட்டுக்கு காங்கிரஸ் சம்மதித்தது. இதையடுத்து, நேற்று மாலை உடன்பாடு ஏற்பட்டதாக குலாம்நபி ஆசாத் அறிவித்தார். காங்கிரஸ் விரும்பியபடி 63 தொகுதிகளை கடைசியாக பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது.
கொள்கை, சுயமரியாதை முக்கியமாம்: காங்கிரஸ் உறவு முறிவு குறித்து தி.மு.க., ஆதரவு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்
தி.க., தலைவர் கி.வீரமணி அறிக்கை: குட்டக்குட்ட தி.மு.க., குனியக்கூடாது. காங்., இல்லாமல் போட்டியிட தி.மு.க., தயாராக வேண்டும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை காப்பதுதான் தி.மு.க.,வின் அடிப்படை லட்சியம். பதவிகளை விட கொள்கைகளும் அவற்றைபரப்பும் இயக்கமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுநடந்தால் அனைவருக்கும்நல்லது. கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.,வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி: தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் முடிவு, கூட்டணியை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. இந்த முடிவால் கூட்டணி பலவீனமாகாது. தி.மு.க., அரசு தனிப் பெரும்பான்மையோடும், வலுவோடும், தமிழகத்தில் அமையும். தி.மு.க.,வின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் அறிக்கை: மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்னைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதும் என்றும், தி.மு.க.,வின் உயர் மட்ட செயற்குழு முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், தி.மு.க., சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர்.