செவ்வாய், 21 டிசம்பர், 2010

war is not over: யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை:இராசபட்ச

இன்னும் உயிருடன் உள்ள தமிழர்களை ஒழித்தால்தானே  போர் முடிவிற்கு வந்ததாகச் சொல்ல முடியும். மேலும், போர் அச்சம் தந்தால்தானே சிங்களர்களிடம் வாக்கு வாங்க முடியும். அரசின் கொடுமைகளைப் போர்ச்சூழல் எனச் சொல்லி உலக நாடுகளிடம் இருந்து தப்பிக்க முடியும்.வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை: ராஜபட்ச

First Published : 21 Dec 2010 01:47:48 PM IST


கொழும்பு, டிச.21: இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை என அந்நாட்டின் அதிபர் மஹிந்த ராஜபட்ச தெரிவித்தார்.கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, இடம்பெயர்ந்த மக்களை மறுகுடியமர்த்தினால் மட்டுமே யுத்தம் முடிவுக்கு வந்ததாக அர்த்தம் என ராஜபட்ச தெரிவித்தார்.தியத்தலாவை ராணுவ முகாமில் பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளிடையே உரையாற்றும்போது ராஜபட்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கைக்கு சர்வதேச அளவில் தரப்படும் அழுத்தங்களை சமாளிக்க அரசிடம் சக்தியும், ஆற்றலும் உள்ளது. யுத்தத்தால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், போராடி வெற்றியை பெற்றுக்கொடுத்தவர்களுக்கும் இலங்கை கடமைப்பட்டுள்ளது என ராஜபட்ச அப்போது தெரிவித்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக