வியாழன், 30 டிசம்பர், 2010

karuna informed wrong informations: கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக் சொல்‌கெய்ம்

கைக்கூலியின் இலக்கணததிற்கேற்ப நடந்து கொள்கிறார் கருணா. ஒரு காலத்தில் தான் நேசித்த தன் நாட்டு தன்  இன மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து வஞ்சகம் புரிவதையே வாழ்க்கையாகக் கொண்டு விட்டார்.கொள்கையில் சறுக்கல்  இருக்கலாம். ஆனால், நாட்டுப் பகைவனாக மாறும் அளவிற்குக் கொள்கை முரணை உண்டாக்கிக்  கொண்டு எச்சில் சோற்றுக்காக உயிர்வாழக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ளவில்லையே! ஒரு வேளை அவர் அதனைப் புரிந்து கொள்ளளும் பொழுது சிங்களர்களால் அவர் உயிர் பறிக்கபபடும்.  இவண் இலக்குவனார் திருவள்ளுவன்
கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக் சொல்ஹெய்ம்


கொழும்பு, டிச.29- அரசியல் காரணங்களுக்காக இலங்கை அமைச்சர் கருணா அடிக்கடி தவறான கருத்துகளை வெளியிடுகிறார் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருணா அளித்துள்ள சாட்சியத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் முழுப்பொய் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."விடுதலைப் புலிகளுக்கும் நார்வே அரசுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கருணா தெரிவித்துள்ள கருத்துகள் பொய்யானவை. அவர் கூறுவது போல் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் வாங்குவதற்கு நார்வே அரசு நிதியுதவி எதுவும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கூறுவதெல்லாம் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளாக உள்ளன. அவற்றில் எள் அளவும் உண்மையில்லை." என்று எரி்க் சொல்ஹெய்ம் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக