புதன், 29 டிசம்பர், 2010

congress 126: காங்கிரசுக் கட்சி 126

நாட்டு மக்கள் நலனுக்காகப் பாடுபட்டு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட காங்.கட்சி எப்போதோ அழிந்து விட்டது. மக்களை அழிக்கும் காங்.கட்சிதான் இப்போது உள்ளது. இப்போதைய காங்.கட்சி தொலைந்தால் மக்கள் வாழ்வில்  அமைதி ஏற்படும். ஊழல் பணம் திருப்பி விடப்பட்டு வளம் ஏற்படும். இதனை அக்கட்சிததலைவர்களே செய்து முடிப்பர். விரைவில் நாடு நலம் பெறும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காங்கிரஸ் கட்சிக்கு வயது 126: சென்னையில் இன்று பொதுக்கூட்டம்

First Published : 28 Dec 2010 03:46:44 AM IST


சென்னை, டிச. 27: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 126-வது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.1885-ம் ஆண்டு ஏ.ஓ. ஹியூம், டபிள்யூ.சி. பானர்ஜி ஆகியோரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, 2010 டிசம்பர் 29-ம் தேதி 126-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.அதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.126-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தங்கபாலு கேக் வெட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். மாலை 6 மணிக்கு தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசவுள்ளனர்.
கருத்துகள்

கங்க்றேஸ் கட்சி அஹிமசிவாதிகள் முட்டை போட்ட கேக் வேட்டுரான்களா காந்தி பாதை இது dhaana
By சலம்
12/28/2010 10:37:00 AM
இந்தியாவை சுரண்டியது போதும்.. தமிழ்க்குடிகளை கெடுத்தது போதும்... ஓய்வுதியம் வாங்கி கொண்டு ஒதுங்கி இருக்கவேண்டிய வயது..
By தமிழினியன்
12/28/2010 10:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக