வியாழன், 6 மே, 2010

மரியாதை இல்லாத கூட்டணி தேவையில்லை: கார்த்தி சிதம்பரம்



திண் ​டுக்​கல்,​​ மே 4:​ தமி​ழகத்தில் குறைந்தது 78 சட்டப் பேரவைத் தொகுதிகள் வரும் தேர்தலில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.​ சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.÷இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:÷ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது.​ அதற்கேற்ற திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.​ ​÷நியமனம் செய்யப்படும் பழக்கத்தை மாற்றி,​​ ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களைத் தேர்வு செய்துள்ளதால் புரட்சி என்ற பட்டம் ராகுல் காந்திக்கு மட்டுமே பொருந்தும்.÷கல்வியின் மூலம்தான் சமுதாயத்தை உயர்த்த முடியும் என்பதனால்,​​ கல்விக் கடனை வழங்கி வருகிறோம்.​ ஆனால்,​​ கல்விக் கடன்,​​ தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு என பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும்,​​ அதில் காங்கிரஸ் கட்சியின் பெயர் தெரிவதில்லை.​ ​÷வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,​​ காப்பீட்டுத் திட்டம் என்று மாநில அரசு தனது கட்சியின் பெயர் தெரியும் வகையில் நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.​ ஏதோ மாநில அரசுதான் எல்லா நலத் திட்ட உதவிகளையும் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.÷இதுபோன்ற திட்டங்களை காங்கிரஸ்தான் செயல்படுத்தி வருகிறது என்பதை இளைஞர் காங்கிரஸôர் ஊர் ஊராகப் பிரசாரம் செய்ய வேண்டும்.​ அப்போதுதான் மக்களின் ஆதரவு கட்சிக்குக் கிடைக்கும்.÷தேர்தல் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த கட்சியினை அப்படியே வழிமொழியத் தேவையில்லை.​ அனைத்தையும் ஆமோதிப்பதாக இருந்தால்,​​ கூட்டணி கட்சியைப் பிரதிபலிப்பதாக இருந்தால்,​​ நாம் தனிக் கட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை.​ ​÷தற்போது நிலவி வரும் மின் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும்.​ ஆட்சிக்கு ஆதரவுதானே தவிர,​​ ஆட்சியில் பங்கு இல்லை.​ எனவே,​​ ஆளும் கட்சியின் தவறை சுட்டிக் காட்டுவதும்,​​ சிறப்பான திட்டங்களைப் பாராட்டுவதும் தவறில்லை.÷தி.மு.க. ​ -​ காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.​ ​ ​வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு குறைந்தது 78 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும்.​ ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 2 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்.​ மரியாதை இல்லாத கூட்டணி காங்கிரஸýக்கு இனி தேவையில்லை என்றார் அவர்.
கருத்துக்கள்

காங்கிரசிற்குத்தான் தமிழ்நாட்டில் மரியாதை இல்லையே! வேறு எங்காவது ஓடிவிடவேண்டியதுதானே! இன்னும் தமிழ் மக்கள் குருதியைக் குடிப்பது ஏனோ? இன்னொரு கோவன் ஆக உருவாகி அரசியல் வாழ்வைக் கெடுத்துக் கொள்ள வேண்டா. அரசியலில் மரியாதை என்பது என்ன? தன் விருப்பத்திற்கு ஏற்பக் கட்சித் தலைமை நடக்க வேண்டும் என்பதுதான். இந்திரா காந்தி காலத்தில் சிவகங்கையில் போட்டியிடும் வாய்ப்பு தராத பொழுது-தனக்கு மரியாதை இல்லை எனக்- கட்சியை வி்ட்டு வெளியேறினார் அப்பா சிதம்பரம். அண்மையத் தேர்தலில் மக்கள் தோற்கடித்த பின்பும்,தனக்கு மரியாதை இல்லை என அரசியல் துறவறம் போகாமல் குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்து அமைச்சராகவும் திகழ்கிறார் அதே அப்பா சிதம்பரம். கூட்டணியைத் தலைமையைத் தாக்கிப் பேசிவி்ட்டு அதே தலைமையுடன்தான் கூட்டணி என முடிவானதும் காலில் விழுந்து பாராட்டி இடம் கேட்பதும் காங்.கின் மரியாதைப் பண்புதான். வன்முறையும் இழிமுறையும் கால்கள் எனக் கொண்டு இயங்கும் கட்சியில் இருநது கொண்டு மரியாதை பற்றிப் பேசி செல்வாக்கு தேட எண்ணுபவர்கள் மறைந்து ‌போவார்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar Thiruvalluvan
5/6/2010 2:28:00 AM

Hahaha...Semma Comedy da Kaarthi..koppan eppadi yeyithaan enpathu unakku gyabagam irukkirathaa????....

By R.Babu
5/5/2010 4:44:00 PM

KARTHI CHIDAMPARAM SHOULD KNOW THAT THERE IS NO CONGRESS IN TAMILNADU WITHOUT DMK OR AIADMK.BUT THE PAST EXPERIENCE PROVED THAT DMK ALLAIANCE IS ALWAYS BETTER FOR THEM.

By h .selvaraj
5/5/2010 4:43:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக