சனி, 11 ஜூலை, 2009

பயிற்சி மருத்துவர் போராட்டத்தை
முறியடிக்க அவசர ஆலோசனை



சென்னை, ஜூலை 10: தமிழ்நாட்டில் பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தத்தை முறியடிக்க, தலைமைச் செயலர் ஸ்ரீபதி தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை தமிழக அரசு எடுத்துள்ளது. பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.4,500-லிருந்து ரூ.6,000, பட்ட மேற்படிப்பு படிப்போருக்கு ரூ.8,500-லிருந்து ரூ.13,000 என பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்கு உதவித் தொகையை ரூ.16,000 வரை உயர்த்தி முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் இந்த உயர்வு போதாது என்று கூறி பயிற்சி டாக்டர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தாங்கள் கோரியபடி ஊதியத் தொகை உயர்வு அளிப்பதை (உதாரணம்: பயிற்சி டாக்டர்களுக்கு மாதம் ரூ.10,000 அளிக்க வேண்டும்.) அரசு உறுதி செய்தால் மட்டுமே பணிக்குத் திரும்ப முடியும் என அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் டாக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் (10 ஏ 1 விதிப்படி) தாற்காலிக அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. போராட்டத்தை பயிற்சி டாக்டர்கள் தீவிரப்படுத்தினால், அவர்களைக் கைது செய்வது, நீதிமன்றக் காவலில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை அடுத்துபடியாக எடுக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
கருத்துக்கள்

பயிற்சி மருத்துவர் போராட்டத்தை அரசு எளிதில் முறியடித்து விடலாம். ஆம். மக்களின் உடல நலத்தையும் உள்ள நலத்தையும் பேணி அதன மூலம் நாட்டு வளத்திற்கு அடிப்படையாக உள்ள மருத்துவர்கள் கோரும் பயிற்சி உதவித் தொகையை அரசு அளிக்க முன்வந்தால் போராட்டம் உடனே நின்று விடும். அவ்வறிருக்க முந்தைய ஆட்சியில் பயன்படுத்திப் பாழ்பட்டுப்போன முறையைப் பயன்படுத்த எண்ணுவது வேறு பகைவர் இலலாமல் அரசு தானே அழிவதற்கு வழி வகுக்கும். ஒப்பந்த அடிப்படையில் இப்போதைய பயிற்சிஉதவித்தொகை அளவு கொடுப்பதாக இருந்தால் யாரும் வரப்போவதில்லை. கூடுதலாகக் கொடுக்கத் திட்டமிட்டு இருந்தால், அத் தொகையைப் பயிற்சி மருத்துவருக்கு அளிக்கலாமே! எனவே, அரசு வீண் பிடிவாதம் பிடிக்காமல் இணக்கமான முறையில் போராட்டத்தைக் கைவிடச் செய்ய உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். நாம் கையைச் சுட்டு்க் கொண்டுதான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. முந்தைய ஆட்சியனர் பெற்ற பாடத்தை உணர்ந்து அடாவடி வழியில் இறங்காமல் நீதி வழங்கட்டும் அரசு!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/11/2009 3:36:00 AM

It is unfortunate that the govt plans to resort to this kind of tactics to bring the strike to an end. This itself proofs that these doctors are needed for the healthy functioning of the Govt health institutions. Insted of appointing new doctors on 10A1 temporary basis, the Govt could talk with the doctors & come to an amikable settlement. Arresting the doctors & putting them behind bars are wrong aptitude & dictatorial tactics & are to be condemmed outright. I hope sane sense prevails over the Govt for a better result--G.Padmanabhan, Kallidaikurichi

By Dr.G.Padmanabhan
7/11/2009 12:25:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக