topper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
topper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 மே, 2010

தெரு விளக்கில் படித்து மாநில அளவில் 2-வது இடம்: ஏழை மாணவிக்கு உதவி கிடைக்குமா?



பானுமதி
சென்னை, மே 14: தெரு விளக்கில் படித்து மாநில அளவில் நர்சிங் படிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மாணவிக்கு பணவசதி இல்லாததால் மேல்படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள கரியப்பா மேல்நிலைப்பள்ளியில் நர்சிங் படிப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம்பெற்றுள்ள மாணவி பானுமதி. இவர் பெற்ற மதிப்பெண் 200-க்கு 116.ஆனால் வெற்றி பெற்ற மாணவர்களின் முகத்தில் இருக்கும் வெற்றிக் களிப்பையும், புன்னகையையும் பானுமதி முகத்தில் பார்க்க முடியவில்லை. பானுமதியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. இவருடைய தந்தை இவர்களைப் பிரிந்து சென்று விட்டார். தன் தாயைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே படிப்பையும் தொடர வேண்டிய நிலை பானுமதிக்கு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து வந்தவுடன் இரவு முழுவதும் தெரு விளக்கின் கீழ் அமர்ந்தே படித்திருக்கிறார் பானுமதி. தொடர் முயற்சியின் விளைவால் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆனால் மேற்கொண்டு படிப்பதற்கு பண வசதி இல்லை.தன்னுடைய வாழ்க்கையில் ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நர்சிங் கல்வி பயின்ற பானுமதியின் எதிர்காலம், உதவும் நல்ல உள்ளங்களின் கைகளில்தான் உள்ளது.
கருத்துக்கள்

ஏழ்மையிலும் கல்வியில் செம்மையான இடத்தையடைந்த பானுமதிக்குப் பாராட்டுகள். கொடையாளர் நிறைந்த தமிழ்நாட்டில் கல்வி உதவி கிடைக்கும். தமிழக அரசும் பட்படப்படிப்பை இலவசமாக அறிவித்துள்ளது. பல்வேறு சலுகைகளும் உதவிகளும் அளிக்கிறது. முதல்வரும் உதவுகிறார். பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. பள்ளியே உதவ முன்வரும். எனவே, மகிழ வேண்டிய நேரத்தில் கவலையில் நேரம் செலவழிப்பானேன்! நைட்டிங்கேள் விருது பெற வாழ்த்துகள். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 5:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Congratulations and hats off to you Bhanumathi.Even with financial difficulties, you have struggled yourself to achieve this.With your dedication,devotion, determination, self-confidence YOU CAN ACHIEVE A LOT IN LIFE.Don't worry.As rightly mentioned by Thiru.ILAKKUVANAR THIRUVALLUVAN, the Govt.of Thamizhnadu, the Charitable Trusts will come forward to help you financially to continue your education.Be Cheerful and have POSITIVE ATTITUDE.YOU WILL CERTAINLY ACHIEVE GREAT THINGS IN LIFE.
By NilaSundaram
5/15/2010 5:59:00 AM

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் மூன்றாவது இடம்



சென்னை, மே 14: ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் நிதின் சந்தோஷ், பிளஸ் - 2 தேர்வில் சென்னையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.சென்னை சூளைமேடு கில்நகர் டிஏவி பள்ளி மாணவனான நிதின் சந்தோஷ் 1,185 மதிப்பெண்கள் பெற்று சென்னையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரது தந்தை சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார். எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணிபுரிகிறார்.வேதியியல், கணிப்பொறி ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார் நிதின் சந்தோஷ். சம்ஸ்கிருதத்தை முதல் பாடமாகப் பயின்று அதிலும் 198 மதிப்பெண் பெற்றுள்ளார்.செய்தியாளர்களிடம் நிதின் சந்தோஷ் கூறியதாவது: அன்றாட பாடங்களை அன்றைக்கே படித்து முடித்ததால்தான் அதிக மதிப்பெண்களைப் பெற முடிந்தது. பெற்றோர்கள் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தனர். பள்ளி நிர்வாகமும் என்னை அதிக அளவில் ஊக்குவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக என் அம்மாவின் கண்டிப்பும், அரவணைப்புமே என்னை வெற்றிபெறச் செய்தது. என் தந்தையைப் போலவே நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆசைப்படுகிறேன் என்றார் நிதின் சந்தோஷ்.
கருத்துக்கள்

இஆ.ப. அதிகாரியாவேன் என எல்லாரையும் போல் சொல்லாமல் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரியாக ஆசைப்படுகிறேன் எனச் சொன்ன நிதினுக்குப் பாராட்டுகள். இந்த எண்ணத்தை விதைத்த பெற்றோருக்கும் பாராட்டுகள். அரசியல்வாதிகளால் ஊழல் பெருகுவதாகக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளால்தான் ஊழல் பெருகுகின்றது. எனவே, பணியில் நேர்மையும் தூய்மையும் கொண்டு சிறக்க வாழ்த்துகள். இனியேனும் தமிழக்கும் தமிழர்க்கும் முதன்மை கொடுக்க வேண்டுகிறேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 5:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சம்ஸ்கிருதம் பயின்று மாநிலத்தில் முதலிடம்



சென்னை, மே 14: சம்ஸ்கிருதத்தை முதல் மொழியாக படித்து, 1,188 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார் சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி அனு ஆசைத்தம்பி.பிளஸ் டூவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர் பாண்டியனை விட இவர் ஒரு மதிப்பெண் அதிமாகப் பெற்றிருந்தும், சம்ஸ்கிருதத்தை முதல் மொழியாகப் படித்ததால், மாநில அளவில் முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் போனது.அனுவின் சொந்த ஊர் சேலம், ராசிபுரம். பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறியுள்ளனர். இவரின் தந்தை ஆசைத்தம்பி, சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். இவரின் தாய் விமலா தனியார் பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியை.வெற்றியைக் குறித்து அனு கூறியதாவது:எனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு, பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்.எனது தந்தையைப் போன்று கிராமப்புறங்களில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்பதே என் லட்சியமாகும். சென்னை அரசு பொது மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வேண்டும். மேற்படிப்பாக இதய மருத்துவம் படிக்க வேண்டும். மேற்படிப்புக்கு அயல்நாட்டுக்குச் செல்ல வேண்டும். மீண்டும் தமிழகத்துக்கு திரும்பி வந்து சேவை செய்ய வேண்டும்.ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம் பயின்றதால், பிளஸ்-2 படிப்பிலும் அதையே தொடர்ந்து படித்தேன். சமஸ்கிருதம் தேர்வு செய்து முதலிடம் பெற்றால், தமிழ் படித்து முதலிடம் பெற்றவர்கள் போன்று புகழ் கிடைக்காது என்று தெரியும்.என் லட்சியம் புகழ் பெறுவது அல்ல. மருத்துவம் பயின்று சேவை புரிய வேண்டும் என்பதே. அதற்கு நான் பெற்ற மதிப்பெண்கள் உதவி புரியும் என்றார் அவர்.அதே பள்ளியைச் சேர்ந்த ஷாரிணியும் சமஸ்கிருதத்தை முதல் பாடமாக படித்து 1,187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
கருத்துக்கள்

ஏதோ சமற்கிருதம் படித்ததால்தான் முதலிடம் பெற்றது போல் தலைப்பு காட்சியளிக்கிறது. பிற மொழிகளுக்கு முதன்மை கொடுக்கும் போக்கு ஒழிய வேண்டும். அதற்கான வாய்ப்பை நல்கும் கல்வித்திட்ட முறை மாற வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே கட்டாய மொழிப்பாடமாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பிற மொழிகைளப் பயிலவதற்கு வாய்ப்பு இருந்தால் போதுமானது. தமிழ் ஆய்ந்த தமிழன் முதலமைச்சாய் இருந்தும் தவணை முறையில் தமிழ் மொழிப்பாடத்தை முதன்மைப்பாடமாக அறிவிக்கும் திட்டம் வெட்கக்கேடானது. தமிழுக்குத்தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்கும் ஆட்சியே நமக்குத் தேவை. ஆனால் முதன்மைக் கட்சிகள் அனைத்தும் இதற்கு மாறா நிலையிலேயே உள்ளன. இத்தகைய கட்சிகள் அனைத்தையும் புறந்தள்ளினால் தமிழ்நாடு இமயமலை போல் உயரும்; அறிவியல் அறிஞர்களும் புதியது புனைவோர்களும் தொழில் மேதைகளும் கல்வியாளர்களும் மருத்துவ வல்லுநர்களும் பிற துறை வல்லுநர்களும் பெருகுவர். அந்நாள் விரைவில் வருவதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 4:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்