support to cong.government லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
support to cong.government லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஜூலை, 2010

மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா? திமுகவுக்கு ஜெயகுமார் கேள்வி


சென்னை,  ஜூலை 17: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாத மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திமுக தயாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க கோரி டி. ஜெயகுமார் தலைமையில் அதிமுகவினர் சென்னை மாவட்ட ஆட்சியர் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அவர் பேசியதாவது:இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அன்றாட நிகழ்வாகி விட்டது.  ஆனால் இந்த கொடுஞ்செயலை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறதே தவிர அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இலங்கை ராணுவம், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா? என்று அவர்களின் குடும்பத்தினர் அஞ்சும் அளவுக்கு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. இவை அனைத்தையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசிடம் இதனைப் பற்றிக் கேட்க தயாராக இல்லை.  தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என மீனவர்கள் மீதே அவர் குற்றம் சுமத்துகிறார். ஆனால் இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.  மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டும்,  மத்தியில் 7 அமைச்சர்களை வைத்து கொண்டிருக்கு திமுக அரசு போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. திமுகவுக்கு தமிழக மீனவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இதை பற்றி எடுத்துரைத்து, தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், வெறும் கடிதத்தை மட்டுமே அனுப்புவதை தவிர எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இன்று வரை திமுக அரசு மேற்கொள்ளவில்லை.மத்திய அரசிடம் இந்தப் பிரச்னை குறித்து பேசவே திமுக தயங்கி வருகிறது.  தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திமுகவுக்கு துணிவு இருக்கிறதா?  தமிழக மக்களையே பாதுகாக்க முடியாத திமுக, ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றார் ஜெயக்குமார்.வடசென்னை மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு,  அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் கே.கே. கலைமணி, இணைச் செயலாளர் ஜெனிஃபர் சந்திரன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

காங்கிரசுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்கப் போவதில்லை என உறுதிமொழி அளிக்க நீங்கள் தயாரா? மத்திய அரசிற்கான ஆதரவை விலக்கியதுடன் காங்.கட்சியானது தமிழ்நாட்டில் தனது ஆதரவை விலக்கும் பொழுது தி.மு.க.விற்குஆதரவு தந்து ஆட்சி கவிழாமல் இருக்க உதவத் தாயரா? 
வினாக்கள் தொடுக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 10 ஜூலை, 2010


மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும்: ஜெயலலிதா

சென்னை, ஜூலை 9: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டிக்கும் வகையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் கடிதங்களை எழுதியதுபோல, மீனவர்கள் பிரச்னையிலும் கடிதம் எழுதியும், கண்டனம் தெரிவித்தும் காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரைக்கும், தோப்புத் துறைக்கும் இடையே தங்களது படகுகளில் புதன்கிழமை (ஜூலை 7) அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்கள், உணவுப் பொருட்கள் மற்றும் வலைகளை இலங்கை கடற்படையினர் கடலில் தூக்கி வீசியுள்ளனர். அறிவழகன் என்பவரின் படகில் இருந்தவர்களை கொடூரமாகத் தாக்கி, நிர்வாணப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர். நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் கொடுமைபடுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் இலங்கை அரசு அடிக்கடி ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதி வழக்கம்போல பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இலங்கை தூதரகம் முன்பு தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. உண்மையிலேயே கருணாநிதிக்கு மீனவ மக்களின் மீது அக்கறை இருக்குமானால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஆனால், இதை அவர் செய்ய மாட்டார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

அப்பொழுதுதான் அ.தி.மு.க. காங்.உடன் ஒட்டிக் கொள்ள முடியும். ஆட்சிக் கவிழ்ப்பைப் பயன்படுத்தாமலேயே தி.மு.க இங்கே பதவியை இழக்கும். இங்கும் மத்தியிலும் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும். என்ன பேராசையடா! வேடிக்கையைச் சுவைக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *