முற்றுகைப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முற்றுகைப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை ப் போராட்டம்: தலைமை ச் செயலகத்தில் 3 அடுக்கு ப் பாதுகாப்பு

சென்னையில், நாளை அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை ப் போராட்டம்: தலைமை ச் செயலகத்தில் 3 அடுக்கு ப் பாதுகாப்பு
சென்னையில், நாளை அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டம்: தலைமை செயலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
சென்னை, அக்.28-

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நாளை சென்னை கோட்டையின் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாளைய போராட்டத்தில் இந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை கூட்டமும் நாளை தொடங்குகிறது.

இதையடுத்து கோட்டையை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். காமராஜர் சாலை, ரிசர்வ் வங்கி, தீவுத்திடல் உள்ளிட்ட கோட்டையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து பஸ் மற்றும் வேன்களில் சென்னைக்குள் நுழையும் போராட்டக்காரர்களை அந்தந்த மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, கைது செய்யவும் மாவட்ட சூப்பிரண்டுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஜார்ஜ் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு சென்னையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 589 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

வைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்

வைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்

First Published : 12 October 2012 12:29 PM IST
காவிரியிர் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்குவதை தடை செய்ய வலியுறுத்தி வைகோ தலைமையில் இன்று நெய்வேலி அனல்மின் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், இன்று காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.