தமிழ் இலக்கிய மாணவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இலக்கிய மாணவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சங்கப் பலகை: தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான புதிய களம்

நல்ல பணி. பாராட்டிற்குரிய சிறந்த பணி.இதனை மாணாக்கர்கள் நல்ல வகையில பயன்படுத்திக் கொண்டு தரமான ஆய்வுக்கட்டுரைகளைப் படைக்க வேண்டும். பெரும்பாலும் இப்போதைய தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள் எதையும் படித்து ஆராய்ந்து எழுதுவதில்லை. மேம்போக்காவும் கூறியதையே கூறலாகவும் தரமற்றும் எழுதுகின்றனர்.  நல்ல படைப்பாளிகள் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. அவ்வாறில்லாமல் மாணாக்கர்கள் எழுதப்போகும்  பொருண்மை தொடர்பான நூல்கள் அல்லது கட்டுரைகளை நன்கு ஆழ்ந்து படித்துச் சிறப்பான ஆழமான படைப்புகளை அளித்துப் பெருமை பெற்றுத் தினமணிக்கும்  பெருமை சேர்க்க வேண்டும்.
ஆங்கிலத் தொடரைச் சரியாக ஆங்கிலத்தில் தெரியும்படி வெளியிட தினமணியை வேண்டுகின்றேன்.
தினமணியின் சங்கப்பலகை சங்கத்தமிழ் போல் புகழ் பெறுவதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சங்கப் பலகை: தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான புதிய களம்







"சங்கப்பலகை' - என்ற இப்புதிய பகுதிக்கு, தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக (இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர்) எடுத்துப் படிக்கும் மாணவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் இந்த சங்கப்பலகையில் ஏறும் தகுதிபெறும்.
மாணவர் பெயர், முழு முகவரி, தொ.பே.எண், படிக்கும் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர், அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து மூன்று பக்கங்களுக்கு மிகாமல் (500 சொற்களுக்குள்) எழுதி அனுப்பவும். கட்டுரைக்கான அடிக்குறிப்புகள் (புஃட்நோட்), மற்றும் கட்டுரை தொடர்பான ஆதாரங்கள் (படங்கள், கல்வெட்டு, செப்பேடு போன்றவை) இணைக்க
வேண்டும். மின்னஞ்சலில் அனுப்புவோர் ஜ்ர்ழ்க் மற்றும் ல்க்ச் ஃபைல் இணைத்து அனுப்ப வேண்டும்.
-ஆசிரியர்

அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
தினமணி - தமிழ்மணி
"சங்கப்பலகை'
29, 2-ஆவது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை,சென்னை-58.