2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்தமிழ்  விருதுகள்’

முதல்வரால் வழங்கப்பட்டன.

முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்களின்பெரு  முயற்சியால்  தொன்மையும்,  இலக்கியவளமும் நிறைந்த தமிழ் மொழியானது  2004-ஆம்  ஆண்டு  ஒன்றிய  அரசால்  செம்மொழியாக  அறிவிக்கப்பட்டது.  செம்மொழித்தமிழுக்கெனத்  தனித்தன்மையுடன்  கூடிய ஓர்  ஆராய்ச்சி  நிறுவனம்  தொடங்கப்படவேண்டும்  என்ற  முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின்    கனவினை    நிறைவேற்ற, ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு, இந்திய  மொழிகளுக்கான  நடுவண்  நிறுவனத்தின்  ஓர்  அங்கமாக,  செம்மொழிக்கான நிறுவன மொன்று அமைக்கப்பட்டது. பின்னர்2008-ஆம்  ஆண்டில்  ‘செம்மொழித்  தமிழாய்வு மத்திய நிறுவனம்’ எனத் தன்னாட்சிபெற்ற     நிறுவனமாகச்     சென்னையில் அமையப்பெற்றது. சென்னை,   பெரும்பாக்கத்தில்   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்களால்  தமிழ்நாடு  அரசின்  சார்பில்  ஒதுக்கப்பட்ட  16.586 காணி நிலத்தில், உரூ.24.65 கோடி மதிப்பீட்டில்கட்டப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்தியநிறுவனக்  கட்டடத்தை  இந்தியத் தலைமையமைச்சர்  12.01.2022  அன்று  காணொலிக்காட்சி வாயிலாகத்  திறந்து வைத்தார்.

தமது சொந்த நிதி உரூ. 1 கோடியில் கலைஞர் கண்ட அறக்கட்டளை!

செம்மொழித்  தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தின்  முதன்மைத்துவம்  கருதி  முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்கள்,  செம்மொழித்தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தில்  24.7.2008அன்று தம் சொந்த நிதி ஒரு கோடி உரூபாயைவைப்புத்  தொகையாக  அளித்து  ‘கலைஞர்மு.கருணாநிதி  செம்மொழித்  தமிழாய்வுஅறக்கட்டளை’யை  நிறுவினார். இந்த    அறக்கட்டளையின்    மூலமாக ஆண்டு தோறும் `கலைஞர்  மு. கருணாநிதிசெம்மொழித்  தமிழ்  விருது’  வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிகஉயரிய வகையில் உரூபாய் 10 இலட்சம்  பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான  கலைஞர்  மு.  கருணா நிதி அவர்களின்  திருவுருவச்சிலையும்  அடங்கியதாகும்.

தொல்லியல்,  கல்வெட்டியல்,  நாணயவியல்,  இலக்கியம்,  மொழியியல்,  படைப்பிலக்கியம்,   இலக்கியத்   திறனாய்வு,   மொழிபெயர்ப்பு, நுண் கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித்     தமிழாய்வுக்குச்     சிறந்தபங்களிப்பை  வழங்கியுள்ள  ஆய்வாளருக்கு இவ்விருது  வழங்கப்படுகிறது. அறக்கட்டளை  தொடங்கப்பட்ட  பின்  2009ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்துநாட்டு   அறிஞர்   பேராசிரியர்   அக்கோபர்ப்போலா  அவர்களுக்கு  2010,  சூன்  23அன்று  கோவையில்  நடைபெற்ற  உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. செம்மொழி  தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தால் வழங்கப்படும் “கலைஞர் மு.கருணாநிதிசெம் மொழித் தமிழ் விருது” 2010 முதல் 2019வரையிலான  பத்து  ஆண்டுகளுக்கு  வழங்கப்படாமல்  இருந்தது.  தற்போது  முதல்வர் மு.க.தாலின்  அவர்களின்  தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித்தமிழாய்வு  மத்திய  நிறுவனத்தின்  வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.அவ்வகையில்  நிறுவனத்தின்  8-ஆவதுஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வர் அவர்களின் தலைமையில்  30.08.2021  அன்று  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் 2010 ஆம் ஆண்டுமுதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான பத்துஆண்டுகளுக்குரிய      –      கலைஞர்மு.கருணாநிதி       செம்மொழித்       தமிழ்விருதுகளுக்கான  விருதாளர்கள்  பட்டியல்மீது ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி,  முதலமைச்சர்  மு.க.தாடாலின் அவர்கள்  நேற்று  (22.1.2022)  சென்னை, அண்ணா  நூற்றாண்டு  நூலகத்தில்  நடைபெற்ற  கலைஞர்  மு.  கருணாநிதி  செம்மொழித்    தமிழ்    விருதுகள்    வழங்கும் விழாவில், 2011  ஆம்  ஆண்டிற்கான  விருதினைப் பேராசிரியர்  பொன்.  கோதண்டராமன்  அவர்களுக்கும்     (மேனாள்     துணைவேந்தர்,சென்னைப் பல் கலைக்கழகம்)2012  ஆம்  ஆண்டிற்கான  விருதினைப் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்(மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) 2013  ஆம்  ஆண்டிற்கான  விருதினைப் பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களுக்கும்(மேனாள்  இயக்குநர்,  புதுவை  மொழியியல்பண்பாட்டு  நிறுவனம்,  மேனாள்  பதிவாளர், புதுவைப்  பல்கலைக்கழகம்) 2014  ஆம்  ஆண்டிற்கான  விருதினைப்பேராசிரியர் கு. மோகனராசு  அவர்களுக்கும்(மேனாள்  பேராசிரியர்  &  தலைவர்,  திருக்குறள்     ஆய்வு     மையம்,     சென்னைப்பல்கலைக்கழகம்,  சென்னை) 2015  ஆம்  ஆண்டிற்கான  விருதினைப் பேராசிரியர்   மறைமலை   இலக்குவனார் அவர்களுக்கும்        (மேனாள்        தமிழ்ப்பேராசிரியர்,  மாநிலக்  கல்லூரி,சென்னை) 2016ஆம்  ஆண்டிற்கான  விருதினைப் பேராசிரியர்  கா.  இராசன்  அவர்களுக்கும்(மேனாள்  பேராசிரியர்,  வரலாற்றுத்துறை,புதுவைப்  பல்கலைக்கழகம்)2018 ஆம் ஆண்டிற்கான விருதினைக்கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும்(மேனாள் தமிழ்ப்பேராசிரியர்,  புதுக்கல்லூரி,  சென்னை) 2019  ஆம்  ஆண்டிற்கான  விருதினைப் பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்கும்  (மேனாள் முதல்வர், கரந்தைப்  புலவர்  கல்லூரி,  தஞ்சாவூர்  & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)-  வழங்கினார்.   விருதுடன் உரூபாய்  10  இலட்சம்    பரிசுத்  தொகை, பாராட்டுச் சான்றிதழ், வெண்கலத்தாலான கலைஞர்      மு.கருணாநிதி   அவர்களின் திருவுருவச்     சிலை ஆகியவற்றை     முதலமைச்சர் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.

2010  ஆம்  ஆண்டிற்கான  விருதிற்குத் தெரிவு செய்யப்பட்ட முனைவர் வீ.எசு. இராசம்(Senior

Lecturer, Department of South Asia Regional Studies, University of Pennsylvania,  USA)

  2017  ஆம்  ஆண்டிற்கான விருதிற்குத்     தெரிவு     செய்யப்     பட்டபேராசிரியர் உலுரிக்கு நிக்குலாசு (Professor and Head of the Institute of Indology and Tamil Studies,  Cologne  University,  Germany)

ஆகியோர் இவ்விழாவிற்கு வர இயலாததால் அவர்களுக்குப்  பிறிதொரு  நாளில்  விருது வழங்கப்படும்.

அமைச்சர்கள் –  அலுவலர்கள் பங்கேற்பு!

இவ்விழாவில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்  க.பொன்முடி,  தொழில்கள்,  தமிழ்ஆட்சிமொழி – தமிழ்ப் பண்பாட்டுத் துறைஅமைச்சர்    தங்கம்  தென்னரசு,    மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.  சுப்பிரமணியன்,  பள்ளிக்கல்வித்  துறைஅமைச்சர்  அன்பில்  மகேஸ்  பொய்யாமொழி,சட்டமன்ற உறுப்பினர்கள்  ஏ.எம்.வி. பிரபாகர்ராசா,  க.  கணபதி,    தமிழ்  வளர்ச்சி  செய்தித்   துறைச்   செயலாளர்   மகேசன்காசிராசன்,  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்  துணைத்  தலைவர்  பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி,  இயக்குநர்  பேராசிரியர் இரா.சந்திரசேகரன், அரசு  உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு  அரசின்  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.