திருவள்ளுவர் வரையறுத்த

வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4

– 
 5.2.0.வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும்.?
      காரணங்கள் — தொகுப்பு
1.உலக வாழ்வின் இன்பத்தை இல்லாது ஆக்கும்
2.நாளும் தொடர்ந்து வரும் வறுமை, அறிவாற்றலை அழிக்கும்
3.வழிப்பறியைச் செய்விக்கும்
4.வறுமை பாவங்களைச் செய்யும்; செய்விக்கும்; இந்தப் பிறப்பு,, மறுபிறப்பு என்றெல்லாம் பாராது; எப்பொழுது வேண்டுமானாலும் வந்தடையும்; துன்புறுத்தும்.
5.வறுமைத் துயர், பழங்குடியின் பெருமையையும் உடல் 
அழகைம் மொத்தமாகக் கெடுக்கும்.
6.உயர்குடிப் பிறந்தார் ஆயினும் இழிவுச் சொற்களைச் சொல்லும் படியான  தாழ்வினை உண்டாக்கும். 
7.வறுமைச் சூழல் பல துயரங்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.   
8.நன்கு உணர்ந்து சொன்னாலும் வறியவரது நற்கருத்திற்கு மதிப்பு இராது.
9.அறம் சாராத வறுமை அடைந்த தனது மகன் பெற்ற தாயாலும் அயலானாகப் பார்க்கப்படுவான்.  
10.”நேற்று கொன்றது போன்று வந்த துன்பம் இன்றும் வந்துவிடுமோ” என்னும் துன்ப எண்ணத்தைத் தரும் 
6.0.0.வான்மழை வழங்கும் வறுமை — குறள்கள் 4
            பொருட் செல்வம் பெருகவும் வறுமை அருகவும் வான் மழையும் இன்றியமையாதது. வான் மழையாலும் வறுமை வரும் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்; அதைப் பருவத்தே பெய்விக்கும் வழிமுறைகளைச் சிந்திக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே, வான் மழை தரும் வறுமைபற்றி வான் சிறப்பு அதிகாரத் தில் [2] 4 குறள்களில் பதிவு செய்துள்ளார் குறளாசான்.   
6.1.0.அக்குறள்கள்:
            13, 14, 15,19.
6.2.0.வான்மழை வழங்கும் வறுமை — தொகுப்பு
1.வான் மழையை வழங்காவிடின், பசிக் கொடுமை வயிற்றுக்குள் வந்து கடுமையான துயரைக் கொடுக்கும்
2.பொய்க்கும் மழை, உழவுத் தொழிலைத் தடுக்கும்; வறுமையைக் கொடுக்கும் 
3.பொய்க்கும் மழை, உழவுத் தொழிலைக் கெடுக்கும்; வறுமையைக் வழங்கும் எல்லாத் துன்பங்களையும் தரும் 
4.வானம் விரும்பும் மழையை வழங்காவிடின், வறுமையை  ஒழிக் கும் தானம் நடவாது; மேன்மேலும் வறுமையே கூடும்
7.0.0.வறுமையின் விதைகள் — குறள்கள் 16
            வறுமையை விதைக்கும் விதைகளாகத் திருவள்ளுவர்  16 குறள்களில் விதைத்துள்ளார். அவற்றைத் தங்கள் வாழ்வில் விதைத்துக் கொண்டவர்கள், அறுவடை செய்யவன எல்லாம் தீராத் துன்பங்கள், அகலா இழப்புகள், மாறாக் கேடுகள் போன்ற வைகள்தான். அவற்றை உணர்ந்து, அந்த நச்சு விதைகளை யாரும் தங்கள் விதைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் திருவள்ளுவரின் இதய வேட்கை. அவரது இதய வேட்கையை அனை வரும் நிறைவேற்றி, வறுமையின் வேரினை அறுப்போம்; வள வாழ்வு பெறுவோம். அந்த நச்சு விதைகள் கீழே விதைக்கப்பட் டுள்ளன.
7.1.0.அக்குறள்கள்:
            135, 166, 167, 177, 178, 179, 616. 617, 626 909,       
      911, 913, 920,925, 932, 933.  
7.2.0.வறுமையின் விதைகள் [காரணங்கள்] தொகுப்பு
 1.பொறாமையை உடைமையாகக் கொள்ளல்
2.ஒருவர் மற்றவர்களுக்கு வேண்டிய ஒன்றைக் கொடுக்கும் போது பொறாமையால், அதைத் தடுத்தல்
3.பொறாமை
4.பிறர் பொருளைக் கைப்பற்றுதல் 
5.பிறர் கைப்பொருள்களைக் கைப்பற்றுதல்
6.அறத்தை அறியாமையும் பிறர் பொருளைக் கைப்பற்றக் கருதும்
   அறிவும்
7.செல்வம் சேர்க்கும் முயற்சி இல்லாமை
8.வறுமையை ஒழிக்க முயலாமல் சோம்பிக் கிடத்தல்
9.பெற்ற செல்வத்தைப் பேணிக் காவாமை
10.மிகுகாமத்தால் மனைவிக்கு அடிமை ஆதல்
11.பொருள் விழையும் வரைவின் மகளிர் நாட்டம்
12.பொருள் பறிக்கும் வரைவின் மகளிர் தொடர்பு
13.கள் உண்ணல்
14.தந்நிலை அறியாத  கள் குடி
15.சூதாடி என்னும் ஒரு பெயரைமட்டும் தந்து, நூறு மடங்கு   பொருளை இழக்கச் செய்யும் சூதாட்டம் 
16.சூதில் விடாது தொகை கட்டி ஆடும் ஆட்டம்
8.0.0.பொருட் செல்வம் ஈட்டல் அளவில் வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — குறள்கள் 10
வறுமை ஒழிப்பு முயற்சியில் ஈதல் ஒப்புரவு ஆற்றுதல்  வேண்டுநர்களுக்கு உதவுதல் போன்ற அறமுறைச் செயல்களுக்கு பொருள் இன்றியமையாதது. சீரழிக்கும் வறுமையின் வேரறுக்கப் பொருள்  மிக மிகத் தேவை.
அத்தகு சமுதாயக் கடைமைகளைச் சிறப்புறச் செய்தற்குப் பொருள் செழிப்பு மிக மிகத் தேவை. அந்தச் செல்வத்தின் சிறப்புகளை எல்லாம் சொல்லி, அதனைச் சேர்க்க வேண்டியதன் தேவையையும் சொல்லியிருக்கின்றார் திருவள்ளுவர்.
8.1.0.அக்குறள்கள்:
             120, 328, 496, 512, 616, 754, 756, 759, 760,,870.
8.2.0.பொருட் செல்வம் ஈட்டல் அளவில்  வறுமை ஒழிப்புச் சிந்தனைகள் — தொகுப்பு
1.அறம் பிறழாது வணிகம் செய்து பொருள் வளம் திரட்டல்
2.நல்வழியில் வரும் செல்வம்தான் பெருமை தரும் என உணர்ந்து பொருள் ஈட்டல்
3.வருவாய் வருவழிகளைப் பெருக்கிப் பொருள் வளம் பெருக்கல்  
4.கடல் கடந்தும் சென்று பொருள் திரட்டுதல்
5.இடைவிடாத முயற்சியால் பொருளை ஆக்குதல் 
6.பொருள் ஈட்டும் அறமுறை அறிந்து, தீது இல்லா வழியில் பொருளைச் செய்தல்  
  1. கைப்பொருள்கொண்டு பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுப் பொருள் ஈட்டல்
  2. அனைத்து அறமுறைச் செயல்களுக்கும் பொருள் மிக மிகத் தேவை என்பதால், பொருள் ஈட்டல்
9.புகழ் தருவழியில் பொருள் திரட்டுதல்
10.சிறிது அளவும் பொருள் இல்லாரைப் புகழ் பொருந்தாது என்பது உணர்ந்து புகழ் வழியில் பொருள் சேர்த்தல்

                பேராசிரியர் வெ.அரங்கராசன்
 முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்
 கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவிற்பட்டி — 628 502