நாம் தமிழர் கட்சியின்

உலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்

 குடியுரிமைத் திருத்தச் சட்ட வரைவு, நாடு முழுவதும் கொண்டு வரப்படவுள்ள தேசியக் குடியுரிமைப் பதிவேடு ஆகியன மக்களாட்சிக்கு எதிரானதென நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
 காசுமீரில் நடக்கும் வன்முறைகளைக் கண்டிப்பதோடு பல்வந்துசிங்கு இரசோனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை விலக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
உலக மனித உரிமைகள் நாளைதை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில்  சென்னையில் நடைபெற்ற மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலுமிருந்து மனித உரிமை ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 இந்த கருத்தரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மனித உரிமை ஆர்வலரும், தில்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான திரு.பாரிவேந்தன் கலந்துரையாடினார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான திரு.இராசீவுகாந்தி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து விவரித்தார். கல்வி உரிமைச் சட்டம், புதிய கல்விக்கொள்கை ஆகியன குறித்துக் கல்வியாளர் பேராசிரியர் திரு.கல்யாணசுந்தரம் எடுத்துரைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் திசம்பர் 8 2019 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்களும், நாம் தமிழர் கட்சியினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். அப்பாசறையின் பொறுப்பாளர்களான திரு.மதுசூதனன், திருமதி. சிவசங்கரி ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
 உலக மனித உரிமைகள் நாள் கருத்தரங்கின் இறுதியில் கீழ் வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1: குடியுரிமைச் சட்ட திருத்த வரைவு 
 பிறநாட்டு மதச்சிறுபான்மை ஏதிலிகளைப்  பாதுகாக்கிறோம் எனும் பெயரில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வரும் மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தியாவிலுள்ள இலங்கையைச் சார்ந்த மதச்சிறுபான்மையினரான ஈழத்தமிழர்களை இந்தச் சட்டத்திருத்தத்தின் கீழ் கொண்டு வராததின் அடிப்படையில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்கிறது என்பதையும்  இந்த அவை சுட்டிக்காட்ட விரும்புகிறது. 
 தீர்மானம் 2: தேசிய குடியுரிமைப் பதிவேடு
 இந்திய ஒன்றிய அரசு நாடு முழுமைக்கும் கொண்டு வரத் திட்டமிடும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டின் மூலம் இலட்சக்கணக்கான மக்களை நாடற்றவர்களாக மாற்றும் மனிதாபிமானமற்ற திட்டத்தை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. 
 தீர்மானம் 3: காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள்
 காசுமீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை இந்த அவை வன்மையாகக் கண்டிப்பதுடன், காசுமீர் மக்கள் அவர்களின் சொந்த மண்ணில் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் பெற்று நிம்மதியாக வாழ உலக மன்பதை குரல் கொடுக்க வேண்டுமென இந்த அவை கேட்டுக் கொள்கிறது.  
 தீர்மானம் 4: பல்வந்து சிங்கு இரசோனாவின் தூக்குத்தண்டனையை நீக்குதல்
 எப்பொழுது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்ற நிலையில் கடந்த 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் சீக்கியர் பல்வந்து சிங்கு இரசோனாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தூக்குத் தண்டனையை உடனடியாக விலக்கி ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒன்றிய அரசையும், பஞ்சாபு மாநில அரசையும்  இந்த அவை வற்புறுத்துகிறது. 
 தீர்மானம் 5: 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்தல்
 ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள  முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், செயக்குமார், இராபர்ட்டு பயசு, இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி தமிழ்நாடு அரசின் அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநரையும், இந்திய ஒன்றிய அரசையும் இந்த அவை வலியுறுத்துகிறது.
அடையாளப்படுத்தப் பட்டுள்ள ஈழத்தமிழர்களையும் புறக்கணித்துள்ள இந்திய ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டுமென இந்த அவை கோரிக்கை விடுக்கிறது.
 தீர்மானம் 10: சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழ்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (2)இன் படியும், ஆட்சி மொழிச் சட்டத்தின் 7 ஆவது பிரிவின் படியும் தமிழைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகக் கொண்டு வர மேலும் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் இந்த அவை கேட்டுக்கொள்கிறது. 
 தீர்மானம் 11: மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து உயிரிழந்த 17 அப்பாவிகள்
 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 அப்பாவி ஏழைகள் உயிரிழந்ததற்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு மேற்கொண்டு இதனைப் போன்ற கெடுநிகழ்வுகள் நேரா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்த அவை கேட்டுக்கொள்கிறது
தீர்மானம் 12: பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் ஈழ ஏதிலிகளை நடத்தக் கோருதல்
இந்திய ஒன்றியத்தில் நீண்ட காலமாகத் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் ஏதிலிகளுக்கான பன்னாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு இந்தியாவில் வாழும் ஏனைய நாட்டு ஏதிலிகள் போல் அங்கீகரிக்கப்பட வேண்டுமென இந்த அவை வலியுறுத்துகிறது.
 தீர்மானம் 13: கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல்
 இந்திய ஒன்றியம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதையும், ஆரம்பக் கல்வியிலேயே பொதுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவதையும்  கைவிடுமாறும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுமாறும் இந்திய ஒன்றிய அரசை இந்த அவை வற்புறுத்துகிறது.
தீர்மானம் 14: பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையும், பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து உடனடியாக அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளால் எவ்வித பாதிப்பும் நேராத வகையில் தகுந்த பாதுகாப்பு அளித்திட இந்திய ஒன்றிய அரசையும் மற்றும் மாநில அரசையும் வலியுறுத்துகிறோம்.