வியாழன், 4 ஜூன், 2015

தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரியத்தால் மறைக்கப்பட்டன.


    SVithiyanandan01
சில அறிஞர் சங்க நூல்களிற் சில ஆரியத் தெய்வங்கள் கூறப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, சங்க காலப் பகுதியில் தமிழ் நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறப்புற்றிருந்தது என்று கொண்டனர். இக்கூற்று ஏற்கத்தக்கதொன்றன்று. சங்கநூல்களில் விட்டுணு இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களே மிகவும் சிறப்புடன் வணங்கப்பட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிபாட்டு முறைகளையும் அந் நூல்களிற் காண்கின்றோம். காலப் போக்கில் ஆரியத் தெய்வங்களுடன் தமிழ்த் தெய்வங்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டன. இப்பொழுது அவற்றைப் பிரித்து வெல்வேறாகக் காணுதல் அரிதாய்விட்டது. சில தெய்வங்களை மட்டும் அவ்வாறு பிரித்துக் காணமுடியும். காலஞ் செல்லச் செல்லத் தமிழருக்கே சிறப்பான வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும் ஆரியக்குரிய கிரியை முதலியவற்றால் மறைக்கப்பட்டு ஒழிந்தன.
- பேராசிரியர் முனைவர் சு. வித்தியானந்தன் : தமிழர் சால்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக