ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சரசையூர் ம.கங்காதரம் நூல் அறிமுகவிழா

azhai_thamizh ezhuthukal05
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் உப அதிபர் சரசையூர் ம.கங்காதரம் அவர்களின் நூல் அறிமுகவிழா 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் இடம்பெறவுள்ளது.
.
கணிதத் துறைப் பட்டதாரியாகிய இவர் கைவரி வல்லுநராகவும் விளங்குகின்றார். சரசாலை சரசுவதி வித்தியாலயம் மற்றும் மட்டுவில் கமலாசனி வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் தமிழ்மேற் கொண்ட தீராக் காதலினால்  பயன்பாட்டுக்கணக்கையும் தூய தமிழிலேயே கற்பித்தார்.
.
ஏ, பி, சி ஒரு முக்கோணம் என்பதற்கு மாற்றாக அ, ஆ, இ ஒரு முக்கோணம் என கணக்குக் கற்பித்தார். அவர் எழுதிய ‘இளநிலைப் பிரயோக கணிதம்’ என்ற நூலில் இத்தூய தமிழ்ப்  பயன்பாட்டை இன்றும் காணலாம்
தரவு : சந்திரமௌலீசன் இலாலீசன்
அகரமுதல 75 நாள் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19, 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக