ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அகரமுதல .இதழ் 10 - படைப்புத் தலைப்புகள் சில




    தமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு  அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் ...


-வழக்குரைஞர் வே.சௌந்தரராசன்- இந்தியப் பாராளுமன்றின் அலுவல்களில் புதிய சில நெருக்கடி நிலைகள் தோன்றியுள்ளன. அரசியல் மேகமோ இருள் சூழ்ந்ததாக இன்று மாறி வருகின்றது. புயலடிக்கத் தொடங்கியுள்ளது போன்ற அச்ச உணர்ச்சி ஆங்காங்கே பரவலாகத் தென்படுகின்றது. இதுகாறும் பல்வேறு நல்ல முடிவுகளைக் கண்ட இப்பேரவை இன்று ஏனோ ஆட்சிமொழிச் சிக்கலுக்கு உரியதோர் தீர்வு காணவியலாது நிற்கின்றது. நல்லோர் உள்ளங்களில் ...

-வழக்குரைஞர் வே.சௌந்தரராசன்- இந்தியப் பாராளுமன்றின் அலுவல்களில் புதிய சில நெருக்கடி நிலைகள் தோன்றியுள்ளன. அரசியல் மேகமோ இருள் சூழ்ந்ததாக இன்று மாறி வருகின்றது. புயலடிக்கத் தொடங்கியுள்ளது போன்ற அச்ச உணர்ச்சி ஆங்காங்கே பரவலாகத் தென்படுகின்றது. இதுகாறும் பல்வேறு நல்ல முடிவுகளைக் கண்ட இப்பேரவை இன்று ஏனோ ஆட்சிமொழிச் சிக்கலுக்கு உரியதோர் தீர்வு காணவியலாது நிற்கின்றது. நல்லோர் உள்ளங்களில் ...


ஒட்டடார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கொட்டான் எனப்படுதல் நன்று.     இந்தியக் கூட்டரசு பதினான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் சட்டம் கூறுகின்றது. எல்லா மாநிலங்களும் இணைந்துள்ள கூட்டரசில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தல் வேண்டும். கூட்டரசுப் பாராளுமன்றில் அவைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை இருத்தலாகாது. கூட்டரசுப் பாராளுமன்றில் தேசிய மொழிகள் என ...


 - தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் தனக்குரிய இடத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டபோதும் ஆங்கில மொழியாட்சி இன்னும் அகன்றிலது. ஆங்கிலேயர் ஆண்டகாலத்தைவிட இன்று ஆங்கிலம் போற்றப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றது. தமிழை இந்நாட்டின் ஆட்சிமொழி என ஒப்புக்கொண்டுள்ள போதிலும் தமிழைக் கற்றுப் புலமையடைந்தோர்களைத் தக்கவாறு பயன்படுத்தும் சூழ்நிலை இன்னும் உண்டாகவில்லை. தலைமையிடத்தில் இருப்போரெல்லாரும் ஆங்கிலப் ...



1938, 1965ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகியர் : 1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 2. தாளமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார். 4. கோடம்பாக்கம் ...


- தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள் வடநாடு சென்று திரும்பிவந்ததும் செய்தியாளர்களிடையே, ‘‘தென்னாட்டில் இந்தியை எதிர்ப்பார் இலர்’’ என்று கூறிவிட்டு ‘‘இந்தியை எதிர்ப்பவர்களும் அரசியல் நோக்கம் கொண்டுதான் எதிர்க்கின்றார்கள்’’ என உரைத்துள்ளதாகச் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. இந்திமட்டும் இந்தியக் கூட்டரசின் மொழியாக ஆவதையும், அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ...


 - தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் இந்தியக் கூட்டரசின் பொதுப்பணிக்குழுவின் தேர்வு மொழியாக இந்தியை ஆக்குவதற்கு, இந்திமொழி பேசப்படாத மாநில முதல் அமைச்சர்களுடன் இந்தியக் கூட்டரசுத்துறையினர் ஆய்வு நிகழ்த்தப்போவதாகச் செய்தியொன்று வெளிவந்துள்ளது. கூட்டரசு மொழிகளில் இந்தியை மட்டும் பொதுப் பணிக்குழுவின் தேர்வு மொழியாக ஆக்குதல் இந்திக்கு மட்டும் ஏற்றம் அளித்து, கூட்டரசின் ஏனைய மொழிகளை இழிவுபடுத்துவதாகும்; ஏனைய மாநிலங்களுக்கு ...


-       கூடலரசன்   இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக ...


 –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) தலைவியும் தோழியும் 'நம் உயர்வை  நினைந்தனர் காதலர்' - தோழி  (தலைவியும் தோழியும்)  தலைவி: தோழி! அவர் சென்றுவிட்டாரா? நேற்று அவர் உரையாடும் போதே அதன் குறிப்பு . . . . .  தோழி: அவர் பிரிந்து பொருள் தேடச் செல்வார் என்ற குறிப்புத்தானே?  தலைவி: ஆம்.  தோழி: உங்களிடத்தில் நான் போய் ...

..
ஆதிக்க இந்தி, தமிழ்வேரில் கொதிநீர் ஊற்றிய கொடுமையைக் கண்டு சிறையில் மாண்ட வீரச்செம்மல் 'நடராசன்!' இந்தி எனும் தேள் தமிழன் தோள் மீது ஏறுவதைக்கண்டு அதை நசுக்கிட எழுந்தான் 'தாளமுத்து!' அவன் சிறையில் மடிந்த தமிழ்ச்சொத்து. இந்தியை எரிக்க தன்னுடல் எரித்த முதல் நெருப்பு 'கீழப்பழுவூர் சின்னச்சாமி!' இவன்தான் நெருப்புக்குத் தமிழை அறிமுகம் செய்தவன்! தமிழுக்காக தீயைத் தீண்டியது 'சிவலிங்கத்தின்' சந்தன உடல்! அது இந்தியை எரிக்க, செந்தீயைத் தின்றது. தமிழைக் காக்க தன்னுடலைத் தீயாக்கி, 'இந்தி'யப் பேயைப் பொசுக்க, உயிரைச் சிந்திய தீரன்... வீரன் 'அரங்கநாதன்!' எழுதாத ..

    இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகக் குற்றம்சாட்டியுள்ள இங்கிலாந்து வெளியுறவு-பொதுவள அலுவலகம், இதுதொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  இலங்கையில் கடந்த 3 மாதங்களில் மனித உரிமைப் பாதுகாப்பு  தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம்  பொதுவளஆய மாநாடு நடைபெற்ற போது  இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மனித ...


..
  -    தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முன் இதழ்த் தொடர்ச்சி) 5. அரசியல் வாழ்க்கை பிளட்டோ கூறுவதுபோல், மனிதன் இயற்கையிலேயே அரசியல் பொருளாவன். எனவே அரசியல் அவனோடு வளர்கிறது.  ‘மனிதன், தன்னுடைய ஆட்களுடன் கூடவே வளர்கிறான்என்பதை அரிசுடாடில் வலியுறுத்துகிறார். எனவே அரசியல் வாழ்க்கை என்பது குமுகாய வாழ்க்கையின் வெளிப்பாடு ஆகும்.  முந்தைய தலைப்பில் இருந்து தொல்காப்பிய காலத் ...



   கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் 'துறைதோறும் கம்பன்என்ற தலைப்பில் வரும் மார்ச்சு 15-ஆம்  நாள் பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது.   கம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், ...


  இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமான்கள் சதாசிவம், இரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்தி(சிங்) ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை  நீக்கிவாணாள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய  கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர்.  அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். ...

  பின்பக்கத்தில் ஆண்டு இல்லாத உரூபாய்தாள்களை மாற்றிக்கொள்ள  சேம(ரிசர்வு) வங்கி அறிவுறுத்தல்   இது குறித்துஇந்தியச்  சேம வங்கி, அதன் வலைதளத்தில், 'கடந்த, 2005 ஆம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்துப் பணத்தாள்களும் திரும்பப் பெறப்படும்,'  என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   2005  ஆம் ஆண்டிற்கு முன், வெளியிடப்பட்ட  பணத்தாள்களில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்காது எனவும் இவற்றை அனைத்து ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக