வெள்ளி, 16 மார்ச், 2012

உலகில் உயரமான மனிதர் வளர்வது நிறுத்தப்பட்டது

உலகில் உயரமான மனிதர் வளர்வது நிறுத்தப்பட்டது: அமெரிக்க டாக்டர்கள் சிகிச்சை
வெர்ஜினியா, மார்ச். 15-
 
உலகில் உயரமான மனிதராக துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான்கோசனா இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு உலகில் உயரமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அவருடைய உயரம் 8 அடி 3 அங்குலம்.
 
அவர் தொடர்ந்து உயரமாக வளர்ந்து கொண்டே இருந்தார். இது பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே உயரத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஹார்மோன் கோளாறால் அவர் உயரமாக வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹார்மோனை கட்டுப்படுத்தினார்கள். இதன் மூலம் சுல்தான்கோசனா தற்போது வளர்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

email

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக