செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழறிஞர்களை பாதுகாத்தால்தான் தமிழ் வளரும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்



சென்னை, ஜூன் 28: தமிழறிஞர்கள்,எழுத்தாளர்களைப் பாதுகாத்தால்தான் தமிழ் வளரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.தமிழருவி மணியனை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும், தமிழறிஞருமான தமிழருவி மணியன் மாநில திட்டக் குழு உறுப்பினராக 2006-ல் நியமிக்கப்பட்டார்.அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.ஆனால், வீட்டு வசதி வாரிய நிபந்தனைகளின் படி ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி, அந்த வீட்டில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று செப்டம்பர் 23, 2009-ல் உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழருவி மணியன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் எனக்கு 2007-ம் ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தையும் சரியாகப் பின்பற்றி வருகிறேன்.இந்த நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தவறியதால் வெளியேற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.நோட்டீûஸ பார்த்த பிறகுதான் அதுபோன்ற விதி இருப்பதே தெரியவந்தது. எங்கள் குடியிருப்பில் உள்ள வேறு யாரிடமும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்படி வலியுறுத்தவில்லை.வார இதழ்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதால் என்னையும், குடும்பத்தினரையும் அவமானப்படுத்தவே வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.எங்கள் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்குமாறு எந்த நோட்டீஸýம் அளிக்காமல் திடீரென்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசியல் காரணங்களுக்காக பாரபட்சமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மனுதாரரைப் போன்றே வீடு ஒதுக்கப்பட்ட மற்றவர்கள், ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வீட்டு வசதி வாரியம் வலியுறுத்தவில்லை.மனுதாரரிடமும் இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. அரசுக்கு எதிராக எழுதியதால் அவரை வெளியேற்றுவதற்காக இந்தக் காரணம் கண்டறியப்பட்டுள்ளது.தமிழருவி மணியன் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருந்தாலும் அவருக்கு என்று சொந்த வீடு இல்லை என்ற அவரது வழக்கறிஞரின் வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.தமிழறிஞர்களைக் காப்பாற்ற வேண்டும்: வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற கோஷம் இடம்பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வர வேண்டும் என்றால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்களைக் காப்பாற்ற வேண்டும்.கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருப்பதால் சாதாரண காரணங்களைக் கூறி அவர்களுக்கு வாழ்விடங்களை மறுக்கக் கூடாது. அதன் பிறகே, தமிழ் வாழ்க என்ற கோஷம் மேலும் ஒளிரும்,  அந்த நம்பிக்கையும் நடைமுறைக்கு வரும் என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


சரியான தீர்ப்பு. ஆனால், யார் ஆட்சியில் இருந்தாலும் தம்மைத் துதிபாடிக் கொண்டிருப்பவர்களுக்குத்தானே பதவிகளும் பட்டங்களும் வசதிகளும் அளிப்பர்.அவர்கள் நிறம் மாறினால் கொடுக்கப்பட்டவை பிடுங்கப்படும் என்பதுதானே நம் அரசியல் ஒழுகலாறு. அவ்வாறிருக்க எவ்வாறு தமிழறிஞர்கள் என்று முதன்மை அளித்து நோக்குவர்? தமிழறிஞர்களை மதிப்பதாக இருந்தால் முதலில் தமிழ் அமைப்புகளில் இருந்து தமிழறிஞர் அல்லாவதர்களை நீக்குதல் வேண்டும். தமிழாய்ந்த தமிழர்களையே தமிழ் சார் பதவிகளில் அமர்த்த வேண்டும். இதையும் ஏ‌தேனும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு அரசிற்கு அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2010 5:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக