வெள்ளி, 11 ஜூன், 2010

புது​வை​யில் 13.3 அடி உயர திரு​வள்​ளு​வர்​ சிலை



புதுச் ​சேரி,​​ ஜூன் 10:​ புதுச்​சே​ரி​யில் ரூ.15 லட்​சம் செல​வில் திரு​வள்​ளு​வ​ரின் 13.3 அடி உயர வெண்​க​லச் சிலை நிறு​வப்​ப​டு​கி​றது.​ இது 2 டன் எடை​யுள்​ளது.​ ​÷பு​துச்​சேரி சுற்​றுலா மைய​மாக விளங்கி வரு​கி​றது.​ இங்கு சுற்​றிப் பார்க்க பல்​வேறு இடங்​கள் இருக்​கின்​றன.​ இப்​போது சுண்​ணாம்​பாறு படகு குழாம் அருகே புதி​ய​தாக திரு​வள்​ளு​வர் சிலை இன்​னும் ஒரு மாதத்​தில் நிறு​வப்​பட உள்​ளது.​ அங்கு ஒரு சிறிய பூங்​கா​வும் நிர்​மா​ணிக்​கப்​ப​டு​கி​றது.​ ​÷ஆந்​திர மாநி​லம் விஜ​ய​வா​டா​வைச் சேர்ந்த புகழ்​பெற்ற சிற்பி பிர ​சாத் ​(44) இந்​தச் சிலை​யின் மாதி​ரியை வடி​வ​மைத்​துள்​ளார்.​ இதை முதல்​வர் வைத்தி​லிங்​கம்,​​ சுற்​று​லாத்​துறை அமைச்​சர் மல்​லாடி கிருஷ்​ணா​ராவ்,​​ பொதுப்​ப​ணித்​துறை ​ அமைச்​சர் ஷாஜ​கான் ஆகி​யோர் பார்​வைக்​கா​க​வும்,​​ அவர்​க​ளின் ஒப்​பு​த​லுக்​கா​க​வும் இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலை​யு​டன் விஜ​ய​வா​டா​வில் இருந்து புதுச்​சே​ரிக்கு வந்​துள்​ளார்.​ ​÷இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலைக்கு ஒப்​பு​தல் கிடைத்​த​வு​டன் இதே வடி​வத்​தில் திரு​வள்​ளு​வர் வெண்​க​லச் சிலையை அவர் வடி​வ​மைக்க உள்​ளார்.​ ​÷அப்​துல்​க​லாம் குடி​ய​ர​சுத் தலை​வ​ராக இருந்​த​போது அவர் கையால் கதர் ஆணை​யத்​தின் தேசிய விரு​தைப் பெற்​ற​வர் இந்​தச் சிலையை வடி​வ​மைக்​கும் பிர​சாத்.​ ​÷தி​ரு​வள்​ளு​வர் சிலை வடி​வ​மைப்பு குறித்து சிற்பி பிர​சாத் கூறு​கை​யில்,​​ ​ திரு ​வள்​ளு​வர் சிலை எப்​படி இருக்க வேண்​டும் என்று புதுச்​சேரி அரசு சார்​பில் புகைப்​ப​டம் கொடுத்​த​னர்.​ மேலும் இன்​டர்​நெட்​டி​லும் திரு​வள்​ளு​வர் படத்தை எடுத்து ஒப்​பிட்டு இந்​தச் சிலையை உரு​வாக்​கி​யுள்​ளேன்.​ ​÷இந்​தச் சிலை​யில் திரு​வள்​ளு​வர் முகம் சிறப்​பாக இருக்​கும்.​ மிகப்​பெ​ரிய புல​வ​ரின் சிலையை என் கை வடி​வ​மைத்​துள்​ளது குறித்து பெரு​மைப்​ப​டு​கி​றேன்.​ அது எனக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக இருக்​கி​றது.​ பாரம்​ப​ரி​ய​மாக கலைக் குடும்​பத்​தைச் சேர்ந்​த​வன் நான்.​ 24 வய​தில் இருந்து இது போன்று சிலை​கள் வடி​வ​மைப்​ப​தில் ஈடு​பட்டு வரு​கி​றேன்.​ ​÷ம​காத்மா காந்தி,​​ ஜவ​ஹர்​லால் நேரு உள்​ளிட்ட தலை​வர்​க​ளின் சிலை​களை வடி​வ​மைத்​துள்​ளேன்.​ ஆந்​திர மாநில முதல்​வர் ராஜ​சே​க​ர​ரெட்டி ஹெலி​காப்​டர் விபத்​தில் இறந்​தார்.​ அந்த இடத்​தில் 20 அடி உயர ராஜ​சே​கர ரெட்​டி​யின் வெண்​க​லச் சிலை நிறு​வப்​பட உள்​ளது.​ அந்​தச் சிலை​யை​யும் தயா​ரித்து வரு​கி​றேன் என்​றார்.​ ​ ​ ​÷பு​துச்​சேரி யூனி​யன் பிர​தே​சம் யேனம் பிராந்​தி​யத்​தில் நாட்​டி​லேயே உய​ர​மான 24 அடி உயர பார​த​மாதா சிலையை வடி​வ​மைத்​த​வர் இந்​தச் சிற்​பி​தான்.​ இதைத் தவிர புதுச்​சேரி அர​சுக்​காக மேலும் சில சிலை​களை இவர் வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ ​÷கா ​ரைக்​கால் பகு​திக்​காக காம​ரா​ஜர் வெண்​க​லச் சிலை 10 அடி உய​ரத்​தில் தயா​ரித்து வரு​கி​றார்.​ காம​ரா​ஜ​ரின் இரண்டு கைக​ளி​லும் சிறு​வன்,​​ சிறுமி ஆகிய 2 பேர் இருப்​பர்.​ இது ரூ.13 லட்​சம் செல​வி​லான வெண்​க​லச் சிலை.​ மேலும் காரைக்​கால் பகு​திக்கு 7 அடி உய​ரத்​தில் உட்​கார்ந்த நிலை​யில் வெண்​கல காந்தி சிலை​யை​யும் இவர் தயா​ரித்து வரு​கி​றார்.​ இதற்கு செலவு ரூ.15 லட்​சம்.​ ​÷இப்​போது புதுச்​சேரி அரசு மக​ளிர் மற்​றும் குழந்​தை​கள் மருத்​து​வ​மனை கட்​டப்​பட்டு முடி​யும் நிலை​யில் இருக்​கி​றது.​ இந்த மருத்​து​வ​ம​னை​யின் முன்பு நான்​கரை அடி உய​ரத்​தில் தாய் குழந்​தைக்கு பாலூட்​டு​வது போன்ற வெண்​க​லச் சிலை​யை​யும் இந்​தச் சிற்பி வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ இதன் மதிப்பு ரூ.6.3 லட்​ச​மா​கும்.​

கருத்துக்கள்

குமரியில் பெண்மையின் சாயலில் திருவள்ளுவரை வடித்து விட்டு நொண்டிச் சாக்கு சொல்லி அதையே புதுமை எனக் கதையளந்ததுபோல் இல்லாமல் நன்கு வடிவமைத்துள்ள சிற்பி பிராசத்திற்குப் பாராட்டுகள். குமரியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கு உரியவர்கள் ஒப்புதல் தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக