thamizh kalvi kazhaga palli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thamizh kalvi kazhaga palli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2011

Students admission increased in Dilli (delhi) thamizh kalvi kazhaga palligal: தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு




வாழ்த்துகள்.http://dinamani.com/edition/story.aspx?&SectionName=India&artid=426394&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 தமிழக அரசு உடனடியாக இப்பள்ளிகளுக்குத் தேவையான பொருளுதவிகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளும் வழங்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

First Published : 03 Jun 2011 04:56:19 AM IST

தில்லி தமிழ்க் கல்விக் கழக சி.பி.எஸ்.இ. பள்ளியின் முகப்புத் தோற்றம்.
புது தில்லி, ஜூன் 2: புது தில்லியில் உள்ள தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் இயங்கிவரும் 7 பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தற்போது அதிகரித்து வருகிறது. இத்தகவலை அதன் செயலர் ஆர்.ராஜூ தெரிவித்தார்.தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) சார்பில் தில்லிவாழ் தமிழர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் வகையில் இப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. புதுதில்லியில் உள்ள லோதி வளாகம், ஜனக்புரி, மந்திர் மார்க், ஆர்.கே.புரம், மோதி பாக், பூசா ரோடு, லக்ஷ்மிபாய் நகர் ஆகிய 7 இடங்களில் இப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்தப் பள்ளிகள் குறித்து ராஜு கூறியது: பள்ளிகளின் வளர்ச்சிக்காக முதல்வர்கள், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் ஆகியோர் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினோம். புதிய கற்பித்தல் முறைகள் பற்றியும், மாணவர்களை ஆசிரியர்கள் அக்கறையுடன் அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தோம்.ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பது தாமதமாவதைத் தடுக்க உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தில்லி அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏசிபி, எம்ஏசிபி போன்ற சலுகைகள் பள்ளியைச் சேர்ந்த பலருக்கும் 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். இதைப் போக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டது.இதையடுத்து, ஆசிரியர்களின் ஈடுபாடு அதிகரித்தது. இவ்வாண்டு நடைபெற்ற தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி கழக நிதியிலிருந்து எடுக்கப்படவில்லை. எங்கள் பள்ளிகளில் படித்துச் சென்ற முன்னாள் மாணவர்களே இச்செலவுகளை ஏற்றுச் செய்து வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் நிதி நிலையும் சீரடைந்து வருகிறது. கேரளம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநில அரசுகள் தில்லியில் அமைந்துள்ள அம்மாநில மொழி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. அதே போன்று தமிழக அரசும் நிதி அளிக்க வேண்டும் என்றார் அவர். இது குறித்து தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் லோதி எஸ்டேட் பள்ளியின் முதுநிலை தலைமையாசிரியை வி.மைதிலி கூறியதாவது:பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ், முதல் மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. 9-ம் வகுப்புக்கு மேல்தான் விருப்ப மொழியாக பிற மொழிகளைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை புதிய பாடமுறைகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோடை விடுமுறையில் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கணினி வகுப்பு, ஆங்கில பேச்சுமொழிப் பயிற்சி, கலை மற்றும் கைவினைப் பயிற்சி, இசை ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நவோதயா, கேந்திரீய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வகையில் கல்வித் தரத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 7 பள்ளிகளிலும் புதிய மாணவர்களின் சேர்க்கை 750 முதல் 1000 வரை அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்றார் அவர்.