புத்தகக் காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகக் காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஜனவரி, 2026

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்

      12 January 2026      அகரமுதல



49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம்.

வரிசை எண்நூலின் பெயர்
 1.அறிவியல் சொற்கள் ஆயிரம்     
 2.அறிவியல் வகைமைச் சொற்கள் 3000   
 3.அன்றே சொன்ன அறவியல் – சங்கக் காலம்
 4.இலக்குவனார் இதழுரைகள் 
 5.இலக்குவனார் நூறு
 6.கட்டுரை மணிகள்
 7.கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடும் கலைச்சொற்களும்
 8.கருவிகள் 1600
 9.சனாதனம் பொய்யும் மெய்யும்
 10.செம்மொழிக்கனவுகள்
 11.சொல்லாக்கம் நெறிமுறையும் வழி முறையும்
 12.தமிழாட்சிக் கனவு
 13.தமிழ் ஆய்வின் விடிவெள்ளி ப.மருதநாயகம்
 14.தமிழ்ச்சிமிழ் – தொல்காப்பியம்
 15.தமிழ்வளர்ச்சிக் கனவு
 16.தனித்தமிழ்க் காவலர்  இலக்குவனார்
 17.தொல்காப்பியமும் பாணினியமும்
 18.நாடுநலம பெற   
 19.படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி.இலக்குவனார்
 20.பேரா.சி.இலக்குவனாரின் இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்)
 21.பேரா.சி.இலக்குவனாரின் பழந்தமிழ்
 22.வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்
 23.வெருளி அறிவியல் 5 தொகுதிகள்
 24.வேண்டவே வேண்டா இந்தி
 25.பேரா.சி.இலக்குவனாரின் தமிழ்க் கற்பிக்கும் முறை
 26.பேரா.சி.இலக்குவனாரின் Tamil Language

இந்நூல்களை வாங்கும் ஒவ்வொருவருக்கும்  உரூ.35/- மதிப்புள்ள பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப் பெறும்.

வியாழன், 25 ஏப்ரல், 2019

மடிப்பாக்கத்தில் புத்தகக் காட்சி

அகரமுதல

சென்னை மடிப்பாக்கத்தில்   புத்தகக் காட்சி

சென்னை மடிப்பாக்கத்தில்  வைகாசி 07, 2050 சனி 20.04.2019 அன்று மாலை 5.00 மணியளவில் கணேசு மகால் மண்டபத்தில் புத்தகக்காட்சி தொடங்கியது. உலகப்புத்தக நாளை முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் இதன் தொடக்க விழாவில் இதன் நிறுவனர் எழுத்தாளர் வீரபாலன் வரவேற்புரையாற்றினார்.
திரைப்பட நடிகர் அருள்மணி புத்தகக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் இராசி அழகப்பன் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.
எழுத்தாளர் பசுமைக்குமார், இதழாளர் சுந்தர புத்தன், நடிகர் எழுத்தாளர் கணேசு பரபு ஆகியோர் தொடக்கத்தில் புத்தகங்கள் வாங்கினர்.
29.04.2019 வரை நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 வரை புத்தகக்காட்சி நடைபெறும்.
மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, கீழ்க்கட்டளை, மேடவாக்கம், இவற்றின் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இதன் அமைப்பாளர் இரஃபீக்கு அகமது வேண்டுகிறார்.
படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.