செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்! - காணுரையுடன்





தாயகம்


‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!
கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் (Cap Maari) சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். (Kap Maari) என்று குறிக்கலாம்தானே. பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது பொதுவாக “முதல்வரை” ஆங்கிலத்தில் – Chief Minister என்பதைச் – சுருக்கமாகக் குறிக்கும் தலைப்பெழுத்துச் சொற்களாகும். நாட்டின் முதல்வரைக் குறிக்கும் சொல்லின் சுருக்க எழுத்துகளைக் கொண்டு கேப்மாரி என்னும் குற்றக் கும்பலின் பெயராகக் குறிப்பது தேதெடுத்த நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.
நடிகர்களுக்குத் தங்கள் பெயருடன் தாங்கள் நடித்த படத்தின் பெயர் என்ற முறையில் கெட்டவன், அயோக்கியன், பிச்சைக்காரன், கொலைகாரன் என்ற தீய பண்பினரைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துக் கொள்வது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அவ்வாறல்ல.
பொதுவாகச் சாதியைக் குறிப்பிடும் வசைச்சொல் எனில் எதிர்த்துப் போராட ஆட்கள் உள்ளனர். முதல்வரைக் குறிப்பதால் யாரையோ குறிக்கிறது என மக்கள் அமைதி காக்கின்றனர். ஆனால் இத்தகைய வசைச் சொல்லுடன் முதல்வரைக் குறிப்பது நாட்டு மக்களையே இழிவு படுத்துவதாகும்.
உலகத் தமிழர் பேரவையில், 'சி.எம் (எ) கேப்மாரி' பெயர் தடை கோரிக்கையை நேற்றைய ராஜகமலம் இதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவையில், ‘சி.எம் (எ) கேப்மாரி’ பெயர் தடை கோரிக்கையை நேற்றைய ராஜகமலம் இதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
நமக்கு படக்குழுவினர் யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. பாராட்டிற்குரிய திறமையான கலைஞர்கள்தாம் அவர்கள். அதனால்,‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும். இத்தகைய பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தால்தான், பண்பற்ற முறையில் படப்பெயர் வைக்கும் போக்கிற்கு இனியாவது முற்றுப்புள்ளி இடப்படும். இப்படி படத்திற்கு பெயர் வைப்பதே சுயவிளம்பரம் தானாக அமையயும் என்பதால்தான். எனவே, இப்பொழுதே அரசு காவல்துறை மூலம்நடவடிக்கை எடுக்குமா?
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
(இலக்குவனார் திருவள்ளுவனாரின் உள்ளீட்டோடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக