ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது




போராட்டத்தில் ஈடுபட்ட

 உழவர்கள் கைது

உழவர்கள் போராட்டம் : uzhavargal_farmersstgruggle

சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையத்தருகே

போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது

  வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் இழந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  கடந்த பங்குனி 18, 2047 / ௩௧-௩-௨௦௧௬ (31.3.2016) அன்று இப்போராட்டம் நடைபெற்றது. “பயிர் செய்த நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு விட்டன. ௬௦௦ ஆயிரம் (60 இலட்சம்) தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன” என்று குரல் எழுப்பிய உழவர்கள், தாங்கள் வங்கிகளில் பெற்றுள்ள வேளாண் கடனை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
  உழவர்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் போராட்டம் நடத்திய அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பெயர்- இ.பு. ஞானப்பிரகாசன் : peyar_name_i.bhu.gnanaprakasan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக