மதுரை - madurai

 

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள்

கூடல் (மதுரை)
  1. பொய்யா விழாவின் கூடற் பறந்தலை
அகநானூறு: 16:14
  1. கொடிநுடங்கு மறுகிற் கூடற்குடா அது
அகநானூறு:149: 14
  1. யாம்வேண்டும் வையைப்புனல் எதிர்கொள்கூடல்
பரிபாடல் : 10:40
4.மதிமலை மாலிருள் கால்சீப்பக் கூடல்
பரிபாடல் : 10: 112
  1. வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல்
பரிபாடல் : 10:12
  1. கூடலொடு பரங்குன்றினிடை
பரிபாடல் : 17: 23
  1. கொய்யுளை மான்தேர்க் கொடித்தேரான் கூடற்கும்
பரிபாடல் : 17:45
  1. புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்
பரிபாடல் : 19:8
  1. நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்
பரிபாடல் : 20: 106
  1. காமரு வையை கடுகின்றே கூடல்
பரிபாடல் திரட்டு 2: 4
  1. பணிவில் உயர்சிறப்பிஞ் பஞ்சவன் கூடல்
பரிபாடல் திரட்டு 2:46
  1. உருகெழு கூடல் அவரொடு வையை
பரிபாடல் திரட்டு 2:91
  1. நான்மாடக் கூடல்நகர்
பரிபாடல் திரட்டு 6
  1. சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்
பரிபாடல் திரட்டு 11

  1. தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
புறநானூறு : 58:13
  1. மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
மதுரைக் காஞ்சி : 429
  1. மாடமலி மறுகிற் கூடல் குடவயின்
திருமுருகாற்றுப்படை : 71

மதுரை
  1. இடைநெறித் தாக்குற்றது ஏய்ப்ப அடன் மதுரை ஆடற்கு
பரிபாடல் : 11: 48: 49
  1. குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு
பரிபாடல் : திரட்டு 8
  1. பொய்யாதல் உண்டோ மதுரை புனைதேரான்
வையை உண்டாகும் அளவு
பரிபாடல் : திரட்டு 9
  1. கோத்தை உண் டாமோமதுரை, கொடித்தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு
பரிபாடல் திரட்டு 10
  1. ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
மாட மதுரையும் தருகுவன்
புறநானூறு : 32: 45
  1. தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே
சிறுபாணாற்றுப்படை : 66-67

-தமிழ்ச்சிமிழ்