தேசியக் குடற்புழு நீக்க  நாள்(பிப்.10)

பள்ளியில் மாணவர்களுக்குக்

குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா

  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு  நல்வாழ்வுத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும்  தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர்  சிரீதர் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு சார்பில் தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு   நல்வாழ்வுத்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு  இரத்த சோகை ஏற்படுவதைத் தவிர்க்கக் குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்‘ மாத்திரைகள் வழங்கப்பட்டன.
5 முதல் 13  அகவை வரை உள்ள மாணவ,மாணவியர்க்கு  மாத்திரை வழங்கபட்டது. இரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள  அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
விழா நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.
[படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]
 இலெ .சொக்கலிங்கம்