செவ்வாய், 28 அக்டோபர், 2014

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல்

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல்

50manalkataththal

தேனிப் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல்கடத்தல்

தேனி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், வடுகப்பட்டி, குன்னூர், உத்தமபாளையம் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல் கடத்தல் நடைபெறுகிறது.
கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் மழை பொழிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் மணல் அதிகமாக வருகிறது. இதனைப்பயன்படுத்திப் பொறிஉழுவை, மாட்டுவண்டிகளில், மணல் கடத்தல் நடைபெறுகிறது.
மாட்டுவண்டி ஒரு வண்டி மணல் உரூ.600க்கும் உழுவைகளில் மணல் உரூ.2000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளான சிற்றூர் ஆட்சி அதிகாரிகள், சிற்றூர் ஆட்சி அதிகாரி உதவியாளர்கள் வண்டிக்கு இவ்வளவு பணம் எனப் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு மணல் அள்ளப்படுவதால் ஆறு, ஓடைகளின் அருகில் உள்ள தோப்புகளில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் அதிகமாக ஆற்றில் தண்ணீர் வரும்போது கரையோரத்தில் உள்ள மரங்கள், செடிகள் ஆகியவை அழிவுக்கு உள்ளாகின்றன.
எனவே மாவட்ட நிருவாகம் மணல்கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தடி நீரைப் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி உழவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
vaigaianeesu_name03




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக