ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

azhai-karutharangam-ethirasu-thalaippu
சென்னை எத்திராசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கப்பெற்ற வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ‘பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதிஉதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்று நடைபெற உள்ளது; எதிர்வரும் கார்த்திகை 9,10, 2045 / நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும்.
இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந.அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேசுவரி, பேராசிரியை முனைவர்.பா. கெளசல்யா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,
“எத்திராசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை தமிழ் மொழியின் மேன்மையையும்சிறப்பையும் பயன்பாட்டினையும் எடுத்துரைக்கும் நோக்கில் ‘பயன்பாட்டுப்பார்வையில் துறைதோறும் தமிழ்’என்னும் பொருண்மையில் பன்னாட்டுக்கருத்தரங்கத்தினை நடத்துகிறது.
இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், பேராளர்கள், கல்வியாளர்கள், தமிழ்ஆர்வலர்கள், பிற துறை நிபுணர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் பங்கேற்று, தமிழைஎந்தெந்தத் துறைகளிலெல்லாம் இன்னும் வலிமையுடன், வளமுடன், முழுமையாகப்பயன்படுத்த முடியும் என்பது குறித்து தம் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பிச்சிறப்பிக்க வேண்டுகிறோம். பயன்பாட்டுத் தமிழுக்கு தங்களால் இயன்ற பங்கினைஆற்றிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.
வெளிநாட்டுப் பேராளர்களும் பங்கேற்கலாம்.வெளிநாட்டுப் பேராளர்கள் 70 அமெரிக்க டாலரும், இந்தியப் பேராளர்கள் உருவா 500, ஆய்வு மாணவர்கள் உருவா 350 , பங்கேற்பாளர்கள் உருவா 150 செலுத்திப்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
வரைவோலை எடுக்க வேண்டிய பெயர்:
முனைவர் அங்கயற்கண்ணி, தமிழ்த்துறை, எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை
[Dr. Angayarkanni, Department of Tamil, Ethiraj College for Women, Chennai]
கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்வடிவில் வெளிவர உள்ளன.
கட்டுரைகள் அனுப்ப இறுதிநாள்: 30.09.2014
மின்னஞ்சல் முகவரி:tamilbk2014@gmail.com
கட்டுரை வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்த்துறைத் தலைவர்,
எத்திராசு மகளிர் கல்லூரி(தன்னாட்சி)
சென்னை- 600 008
தொடர்புக்கு:
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் சு. புவனேசுவரி 94444 18670
முனைவர் பா. கௌசல்யா 91763 63139

http://ethirajtamil.blogspot.in/

 ethiraj-ethirasu-logo
ethiraj-college-ethrasu01



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக