செவ்வாய், 29 ஜூலை, 2014

நெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்

நெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்

sports-netherland02
நெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள்,   பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன.
sports-netherland01
இறுதியில்
3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும்
2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும்
1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும்
பெற்றுக் கொண்டன.
 sports-netherland04
வெற்றிபெற்றகழகங்களிற்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டு அனைவரும் பாராட்டவும் மகிழவும் இவ்வாட்டம் இனிதே நிறைவுற்றது.
sports-netherland03

தரவு அகக்கீரன், ஐரோப்பா
நன்றி : பதிவு
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக