ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

இலங்கை இனப்படுகொலை பற்றி இந்தியப் பாராளுமன்றில் செவ்வாய் விவாதம்

இலங்கை விவகாரம்! இந்திய பாராளுமன்றில் செவ்வாய் விவாதம்

இந்திய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 16 ம் திகதி இலங்கை தொடர்பாக குறுகிய கால விவாதம் இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் நிவாரண மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் நலன்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து இந்திய அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஒரே நேரத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறும்.
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை நிலைவரம் தொடர்பாக தமது கருத்துகளை வெளிப்படுத்த எம்.பி.க்கள் பலர் ஆவலாக இருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண வேண்டிய தேவை இருப்பது பற்றியும் தமது வலியுறுத்தல்களை அவர்கள் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.
இந்தக் கலந்துரையாடல் முதலில் இடம்பெறவிருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.
அடுத்த வாரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுமென சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக